Home » Archives by category » அரசியல் (Page 17)

சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

Comments Off on சூடு பிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!

திமுக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவா, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வரும் ஜூலை 10-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் 14-ம் தேதி முதல் தொடங்கியது. விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் […]

Continue reading …

நீட் தேர்வு முறைகேடு! காங்கிரஸ் போராட்டம்!

Comments Off on நீட் தேர்வு முறைகேடு! காங்கிரஸ் போராட்டம்!

காங்கிரஸ் கட்சி நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகளை கண்டித்து ஜூன் 21-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. ஆண்டு தோறும் இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இத்தேர்வு, இந்த ஆண்டு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் […]

Continue reading …

தமிழிசை பாஜகவினரே தன்னை விமர்சிப்பதாக வேதனை!

Comments Off on தமிழிசை பாஜகவினரே தன்னை விமர்சிப்பதாக வேதனை!

தமிழிசை சௌந்தராஜன், பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனனிடம் பாஜகவை சேர்ந்தவர்களே தன்னை விமர்சிப்பதாக புகார் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அண்ணாமலை, தமிழிசை ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டனர். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் செயல்பாட்டுக்கு தமிழிசை பகிரங்கமாக கண்டனம் தெரிவித்திருந்தார். அடுத்த சில நாட்களில் ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அமித்ஷா கண்டித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழிசைக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட […]

Continue reading …

துணை முதலமைச்சராகிறார் பவன் கல்யாண்!

Comments Off on துணை முதலமைச்சராகிறார் பவன் கல்யாண்!

ஆந்திர மாநில துணை முதலமைச்சராக ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், கோப்புகளில் கையெழுத்திட்டு பதவியேற்றுக் கொண்டார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி படுதோல்வி சந்தித்தது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 175 தொகுதிகள் கொண்ட ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களிலும், […]

Continue reading …

ஜெகன்மோகனின் பங்களா குறித்து நடிகை ரோஜாவின் விளக்கம்!

Comments Off on ஜெகன்மோகனின் பங்களா குறித்து நடிகை ரோஜாவின் விளக்கம்!

சமீபத்தில் மிகப்பெரிய ஹாட் ஆப் டாப்பிக்கானது முன்னாள் ஆந்திர முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களா பற்றிய செய்திகள்தான். இது குறித்து நடிகை ரோஜா “500 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அந்த பங்களா அரசுக்கு சொந்தமானது என்றும் ஜெகன்மோகனுக்கு சொந்தமானது என்று தவறான தகவல் பரவி வருகிறது. ருஷிகொண்டா என்பது ஒரு சுற்றுலா மையம் என்பதால் அங்கு சுற்றுலாத்துறை கட்டிடங்கள் கட்டுவது தவறா? வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடத்தில் […]

Continue reading …

நீதியரசர் அறிக்கையை குறித்து அண்ணாமலை கருத்து!

Comments Off on நீதியரசர் அறிக்கையை குறித்து அண்ணாமலை கருத்து!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீதியரசர் சந்துரு அளித்துள்ள அறிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத பல அம்சங்கள் உள்ளதால் நீதியரசர் சந்துரு அறிக்கையை ஏற்கமுடியாது என தெரிவித்துள்ளார். அண்ணாமலை, “பள்ளிக்கூடத்தில் சாதி இருக்க கூடாது என்பதில், பாஜகவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை, மாணவர்கள் நெற்றியில் திலகம் இடுவது, கையில் கயிறு கட்டுவது போன்ற பல கட்டுப்பாடுகள் உள்ளது, பள்ளி அளவில் மாணவர் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை” என்று தெரிவித்துள்ளார். நீதியரசர் சந்துரு, அரசுப் பள்ளிகளின் […]

Continue reading …

இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை; பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

Comments Off on இந்திரா காந்தி இந்தியாவின் அன்னை; பாஜக அமைச்சர் சுரேஷ் கோபி!

நடிகர் சுரேஷ் கோபி கேரளாவில் பாஜக சார்பில் நின்று வென்று அமைச்சரானார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசியுள்ளார். பாஜக கூட்டணி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும் கேரளாவில் முதல் முறையாக ஒரு சீட்டை மலையாள நடிகர் சுரேஷ் கோபி மூலம் கைப்பற்றி தடம் வைத்துள்ளது. சுரேஷ் கோபி அமோக வெற்றி பெற்றதால், அவருக்கு பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் பிரதமர் இந்திரா […]

Continue reading …

தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணம் ரத்து!

Comments Off on தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பயணம் ரத்து!

தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி வரவிருந்ததாகவும் சென்னையிலிருந்து அவர் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து பெங்களூர் வந்தே பாரத் ரயில் மற்றும் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடி சென்னைக்கு வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். திடீரென பிரதமர் மோடியின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜக துணை தலைவர் கரு நாகராஜன், “நிர்வாக காரணங்களுக்காக […]

Continue reading …

ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.500 கோடியில் பங்களாவா?

Comments Off on ஜெகன்மோகன் ரெட்டிக்கு ரூ.500 கோடியில் பங்களாவா?

500 கோடி ரூபாய் மதிப்பில் முன்னாள் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா கட்டியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி சமீபத்தில் நடந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தார். அவரால் எதிர்க்கட்சியை அந்தஸ்தை கூட பிடிக்க முடியவில்லை. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெகன்மோகன் மீது சுமத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் 500 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆடம்பர பங்களாவின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் […]

Continue reading …

மோடி ஆட்சி குறித்து ராகுல் காந்தி கண்டனம்!

Comments Off on மோடி ஆட்சி குறித்து ராகுல் காந்தி கண்டனம்!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி இரங்கலை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் வலைதளபக்கத்தில், “மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் […]

Continue reading …