Home » Archives by category » அரசியல் (Page 18)

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா?

Comments Off on பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா?

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரமாக மேலாக விசாரணை நடைபெற்றது. கர்நாடகா மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது கடந்த மார்ச் 15ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பெங்களூர் சதாசிவ நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இப்புகாரின் அடிப்படையில், பெங்களூர் சதாசிவ நகர் காவல்நிலையத்தில், […]

Continue reading …

அதிமுகவில் சசிகலாவுக்கு இடல்லை; ஜெயக்குமார் கருதது!

Comments Off on அதிமுகவில் சசிகலாவுக்கு இடல்லை; ஜெயக்குமார் கருதது!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை பார்த்துவிட்டோம். இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும். விக்கிரவாண்டி தொகுதியில் எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளனர். இதுவரை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த […]

Continue reading …

மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா!

Comments Off on மணிப்பூர் குறித்து ஆலோசனையில் அமித்ஷா!

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “தேர்தல் முடிந்து விட்டது, புதிய அரசும் அமைத்தாகிவிட்டது, இனி மக்களுக்கான பணிகளை செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். குறிப்பாக மணிப்பூரில் உள்ள பிரச்சனையை உடனடியாக தீர்க்க மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்திருந்தார். மத்திய அரசு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகாவத்தின் அறிவுரையை ஏற்று தற்போது மணிப்பூர் விவகாரத்தில் சுமூகமான தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. மணிப்பூரில் கடந்த ஒரு […]

Continue reading …

மின்னணு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்! ராகுல் காந்தி டுவிட்!

Comments Off on மின்னணு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்! ராகுல் காந்தி டுவிட்!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராகுல் காந்தி இதுகுறித்து எக்ஸ் தளத்தில், “ஜனநாயக நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு வெளிப்படையான தேர்தல் முறை மட்டுமே. வாக்குப்பதிவு இயந்திரம் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அவற்றின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி […]

Continue reading …

விழுப்புரம் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Comments Off on விழுப்புரம் தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விழுப்புரத்தில் தாசில்தார் வீட்டில் 2 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். விழுப்புரம் தாசில்தார் மீது 2015ம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தற்போது சோதனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடலூர் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்தது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுந்தர்ராஜன், […]

Continue reading …

கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்!

Comments Off on கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்குதல் குறித்து ஈபிஎஸ்!

நெல்லை கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட ஜாதி பிரிவினர் மற்றும் பெண் வீட்டார் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். இச்சம்பவத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் […]

Continue reading …

நிதிஷ்குமார் குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனம்!

Comments Off on நிதிஷ்குமார் குறித்து பிரசாந்த் கிஷோர் விமர்சனம்!

அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களில் விழுந்தது, பீகாரை அவமானப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 12 இடங்களை வென்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் டில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் கால்களில் விழப் போனார். அப்போது அவரை பிரதமர் மோடி தடுத்து நிறுத்தினார். இச்சம்பவத்தை குறிப்பிட்டு, […]

Continue reading …

ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

Comments Off on ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்க வேண்டும், அது அழிவிற்கு காரணமாக இருந்து விடக்கூடாது வலியுறுத்தி உள்ளார். பிரதமர் மோடி இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி அழைப்பை ஏற்று இத்தாலி சென்றார். போப் பிரான்சிஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்து பேசினார். போப் பிரான்சிஸை பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது அன்பை […]

Continue reading …

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

Comments Off on விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார். திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் […]

Continue reading …

அம்மா உணவகங்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி!

Comments Off on அம்மா உணவகங்களுக்கு ரூ.5 கோடி ஒதுக்கிய சென்னை மாநகராட்சி!

சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அம்மா உணவகம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி, திமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சில அதிருப்திகள் ஏற்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை புதுப்பொலிவு செய்ய சென்னை மாநகராட்சி 5 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரூபாய் 5 கோடியில் சென்னையில் உள்ள […]

Continue reading …