ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கையனூர் என்ற இடத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பூத் கமிட்டி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடனும் கலந்துரையாடினார். பின்னர் பிரசாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர், விவசாயிகளின் நலன் கருதி பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ததன் மூலம் 16 லட்சத்து 43 […]
Continue reading …திருவள்ளூர் அடுத்த மணவாளன் நகர் பகுதியில் விவசாயிகள் மற்றும் நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசிய போது, கிராமப்புறத்தில் இருக்கின்ற வேளாண் பெரு மக்கள் வேளாண்மையை மேற்கொள்வதற்காக அங்கே இருக்கின்ற கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடனை பெறுகின்றார்கள். இதுதான் எதார்த்த உண்மை. வேளாண் பெரு மக்கள் புயலால் பாதிக்கப்பட்டாலும் நிவாரணம் கொடுக்கின்றோம். தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டாலும் பயிர் சேதத்திற்கு கணக்கிட்டு நிவாரணம் அளிக்கின்றோம். வறட்சி ஏற்பட்டாலும் நிவாரணம் கொடுத்த ஒரே […]
Continue reading …சென்னை: 4 ஆண்டுகால பெங்களூரு சிறைவாசத்துக்கு பின் செய்தியாளர்களை முதல் முறையாக சந்தித்த போதே அதிமுக தலைமை அலுவலகம, ஜெ. நினைவிட விவகாரங்களில் அதிரடியாக கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் அரசியல் களத்தில் இனி எப்போதும் பரபரப்புதான் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் சசிகலா. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன போதே ஜெயலலிதா கார், அதிமுக கொடி என அதகளப்படுத்தினார். இதனால் அமைச்சர்கள் பலரும் கொந்தளித்தனர். சசிகலா பெங்களூருவில் இருந்து புறப்படுகிறார் என்ற உடன் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, […]
Continue reading …சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்யக்கூடாது என காவல்துறை நோட்டீஸ் வழங்கிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவர் கட்சிக் கொடி கட்டிய அவரது காரை சசிகலா பயனம் செய்ய […]
Continue reading …சிறையில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூரில் தங்கி இருக்கிறார். அவர் வரும் 7ம் தேதி தமிழகம் வருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த நிலையில் தற்போது 8ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியை சென்னையில் நேற்று இரவு சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவே மாட்டோம் என்பது திட்டவட்டமான அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். […]
Continue reading …சென்னை: தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசின் சார்பில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் விளம்பரங்கள் மக்களிடையே நல்ல வரவற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை மின் பற்றாக்குறையிலிருந்து மின் மிகை மாநிலமாக மாற்றி முதலீடுகளை ஈர்த்து புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு கொண்டு வந்து […]
Continue reading …‘ புதுடில்லி : ”உலகில் பல சர்வாதிகாரிகளின் பெயர்கள் பெரும்பாலும் ‘எம்’ என்ற எழுத்தில் தான் தொடங்குகிறது” என ராகுல் டுவீட் செய்ததற்கு பலரும் அவருக்கு பதில் கொடுத்து வருவதால் டுவிட்டரில் இந்த விவகாரம் டிரெண்ட் ஆனது. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து 60 நாட்களை கடந்து டில்லியில் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல். விவசாயிகள் கூட்டம் கூடுவதை தடுக்க டில்லி எல்லையில் […]
Continue reading …முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவர் பிப்ரவரி 7ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சசிகலா சென்னை வந்தவுடன் முதலில் சந்திக்கும் நபர் பூங்குன்றன் ஆகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா அறக்கட்டளையின் தலைவராக இருந்து வரும் இவர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தார் என்பதும் அதிமுகவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இவரது பெயரில் தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது எனவே முதலில் பூங்குன்றனை […]
Continue reading …உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் உயநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு பளார் விட்ட நீதிபதி!! திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுகவை சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உதயநிதி அரசியலுக்கு பளார் என உரைக்கும் படி அமைந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது தந்தையை முதல்வராக மாற்றவேண்டும் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்,பிரச்சாரங்களுக்கு நடுவே ஆதாரமற்ற பல பொய்களையும் கூறிவருவதுடன் ஆபாசமாக பேசுவதையும் […]
Continue reading …சென்னை: அதிமுக கொடியுடன் நேற்று சசிகலா ஆஸ்பத்திரியில் இருந்து கிளம்பி சென்ற செய்தியின் தாக்கம் இன்னமும் குறையவில்லை. நேற்று மதியம் 12 மணிக்கு சசிகலா டிஸ்சார்ஜ் ஆனார்.. முன்னதாகவே, ஆஸ்பத்திரிக்கு வெளியே ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு உற்சாக முழக்கமிட்டு வாழ்த்தி கொண்டிருந்தனர்.. அப்போதுதான் சசிகலா வெளியே வந்து அவருக்காக அங்கே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறினார். அதற்கு பின்னால், இன்னொரு காரில் டிடிவி தினகரன் செல்ல, மற்றோரும் பின்னாடியே காரில் கிளம்பி சென்றனர். ஜெயலலிதா சசிகலா ஏறிச்சென்ற கார் […]
Continue reading …