Home » Archives by category » அரசியல் (Page 20)

தமிழிசை நிரூபித்தால் பாஜகவிலிருந்து விலக தயார்; திருச்சி சூர்யா!

Comments Off on தமிழிசை நிரூபித்தால் பாஜகவிலிருந்து விலக தயார்; திருச்சி சூர்யா!

பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்ற மண்டல தலைவர் கருப்பையாவை, மதுரை வில்லாபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று வாழ்த்தினார். செய்தியாளர்களிடம் திருச்சி சூர்யா, “விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலத்தில் அதிக வாக்குகளை இந்த மண்டலத்தின் தலைவர் கருப்பையா பெற்று இருக்கிறார். பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்ற திராவிட கட்சிகளின் கொள்கைக்கு அப்பாற்பட்டு பணமில்லாமல் தேர்தலை சந்திப்போம் என்கிற முடிவை எங்கள் மாநில தலைவர் எடுத்தார். […]

Continue reading …

கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் கைது!

Comments Off on கங்கனா ரனாவத்தை அறைந்த பெண் காவலர் கைது!

நேற்று நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மீது மூன்று பிரிவுகளும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின. இன்று அவர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இமாச்சலப் பிரதேசம் மண்டி என்ற தொகுதியில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரிடம் வாக்குவாதம் செய்த பெண் காவலர் ஒரு […]

Continue reading …

இபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

Comments Off on இபிஎஸ் சொன்ன அதிரடி பதில்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் அண்ணாமலையை அடையாளம் காட்டியதே அதிமுகதான் என்றும் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர், “2019 மக்களவைத் தேர்தலை விட, நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. பல்வேறு விமர்சனங்களை தாண்டி அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பது தான் கட்சிகளின் நிலைப்பாடு, பாஜக […]

Continue reading …

நாளை பதவியேற்பை முன்னிட்டு டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

Comments Off on நாளை பதவியேற்பை முன்னிட்டு டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

நாளை டில்லியில் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்கவுள்ள உள்ளார். இதனால் அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கத் தடை, எல்லைகளில் கண்காணிப்பு, போக்குவரத்து மாற்றம் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமாகிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7.15மணியளவில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தலைநகர் டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு […]

Continue reading …

வென்றும் பயனில்லை! தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!

Comments Off on வென்றும் பயனில்லை! தமிழச்சி தங்கபாண்டியன் பதிலடி!

தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும், நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது என்று தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைத்தளத்தில் அவர், “திமுக கூட்டணி 40 இடங்களில் வென்றும் பயனில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அப்படியில்லை தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு […]

Continue reading …

முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

Comments Off on முதலமைச்சர் தலைமையில் நாளை திமுக எம்பிக்கள் கூட்டம்!

நாளை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக புதிய எம்பி-க்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணி கைப்பற்றியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று […]

Continue reading …

கெஜ்ரிவால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Comments Off on கெஜ்ரிவால் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமலாக்கத் துறை டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு விசாரணையை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்து கடந்த 2ம் தேதி […]

Continue reading …

சந்திரபாபு நாயுடு மனைவிக்கு ரூ.572 கோடி சொத்தா?

Comments Off on சந்திரபாபு நாயுடு மனைவிக்கு ரூ.572 கோடி சொத்தா?

சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் 579 கோடியாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஸ்வரி வைத்திருக்கும் சில நிறுவனங்களில் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. ஜூன் ஒன்றாம் தேதி தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியான போது அவர் வைத்திருந்த பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் கூட புவனேஸ்வரி நிறுவனத்தின் […]

Continue reading …

மோடி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

Comments Off on மோடி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாடாளுமன்ற பராமரிப்பு என்கிற பெயரால், காந்தி, அம்பேத்கர், சத்திரபதி சிவாஜி ஆகியோரது சிலைகள் அகற்றப்பட்டு, இடம் மாற்றம் செயலை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பத்தாண்டுகளாக மாற்றுக் கருத்துகளுக்கும் விமர்சனம் செய்யும் கருத்துரிமையினையும் சகித்துக் கொள்ள முடியாத, பாசிச வகைப்பட்ட தாக்குதலை மோடி அரசு நடத்தி வந்தது. இதன் காரணமாக சிலர் கொல்லப்பட்டனர். பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். […]

Continue reading …

பிரதமரும், முதலமைச்சரும் ரஜினிக்கு அழைப்பு!

Comments Off on பிரதமரும், முதலமைச்சரும் ரஜினிக்கு அழைப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பிரதமராக மோடி பதவி ஏற்கும் விழாவிற்கும், முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்கும் விழாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் இந்த இரண்டு விழாவிற்கும் செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. ஜூன் 9ம் தேதி பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க இருப்பதாகவும் அதற்கான விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மோடி பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்ள […]

Continue reading …