வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று, விழுப்புரத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர், “பழனிசாமி பேசுவதைப்பார்த்தால் ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வார். ஒரு மனுஷன் பொய் பேசலாம். ஆனால், ஏக்கர் கணக்கில் பேசக் கூடாது. என்று அந்த காமெடி நினைவுக்கு வருகிறது. பொய்யின் முழு உருவமாக இருக்கும் பழனிசாமி அவர்களே […]
Continue reading …பாஜக வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஆதரவாக பல்வேறு முக்கிய பிரமுகர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அவருடன் 30க்கும் மேற்பட்ட பாஜகவினரும் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் […]
Continue reading …இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையாக சுயாட்சியும் கூட்டாட்சியும் மதச்சார்பின்மை சமூக நீதி தமிழ் ஆட்சி மொழி கல்வி நதிநீர் உரிமைகள் சிறுபான்மையினர் நல தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன் தூக்கு தண்டனை ஒழிப்பு தமிழீழம் மலர பொது வாக்குறுப்பு புதுவை மாநிலம் உள்ளிட்ட 74 தலைப்புகளின் கீழ் இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர், “இந்தியா கூட்டணி வெற்றி […]
Continue reading …டில்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை காவலை, ஏப்ரல் 18ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி மாநில துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். இன்று மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 18ம் தேதி வரை நீட்டித்து டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
Continue reading …வரும் 12ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்திற்கு வருகிறார். அவர் கோவை மற்றும் நெல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமின்றி இந்தியா கூட்டணியின் தலைவர்களும் இவ்விரு கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விரண்டு கூட்டங்களையும் பிரம்மாண்டமாக நடத்த முதலமைச்சர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தை முதலில் சென்னையில் நடத்த தான் திட்டமிடப்பட்டதாம். ஆனால் அண்ணாமலைக்கு செக் வைக்க வேண்டும் […]
Continue reading …காங்கிரஸ் பிரமுகர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பார்வை இல்லாத ஒருவன் கண்ணாயிரம் என்று பெயர் வைத்துக் கொள்வது போல் ஊரை சுற்றிக் கொண்டிருக்கும் பரதேசி சீமான் என்ற பெயர் வைத்துக் கொள்வான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி போட்டியில் இருக்கிறது. சீமான் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகிறது. இதை ஒரு நான்காவது கூட்டணியாக அரசியல் விமர்சகர்கள் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் […]
Continue reading …உளவுத்துறை தமிழகத்திலுள்ள 8 தொகுதிகள் திமுகவுக்கு சாதகமாக இல்லை என்று தமிழக முதலமைச்சருக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளனர். இதையடுத்து முதலமைச்சர் சுதாரித்து அந்த தொகுதிகளுக்கு கூடுதலாக சில அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அனைத்து கருத்துக்கணிப்புகளும் திமுக கூட்டணி தான் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறினாலும் உளவுத்துறை முதலமைச்சருக்கு அனுப்பி உள்ள ரகசிய ரிப்போர்ட்டில் […]
Continue reading …புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி திமுக கூட்டணியில் தொகுதியே கொடுக்காமல் இருந்தாலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவு தருவது போல் அதிமுக கூட்டணியிலும் தொகுதி பெறாமல் 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார் பூவை ஜெகன்மூர்த்தி கூறுகையில், “மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட் தராததால் வருத்தத்தில் இருந்தோம். எங்கள் கட்சி தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி தொடரலாம் என்று கூறியதால் 40 தொகுதிகளிலும் புரட்சி பாரதம் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும்” […]
Continue reading …வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக விஜய் சேதுபதி வெளியிட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் “ஒவ்வொரு தேர்தல் வரும் போது நம்முடைய ஒரு ஓட்டு என்ன பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று பலர் மெத்தனமாக இருந்து விடுகிறார்கள். அதை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய எதிர்கால தலைமுறையினர்களுக்காக […]
Continue reading …கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் வரும் பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொங்கு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் திமுகக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் அவர், “அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால் அக்கட்சியின் தொண்டர்கள் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். கூட்டணியிலிருந்து வெளியே வருவது போல் எடப்பாடி […]
Continue reading …