பிரதமர் மோடி மற்றும் பாஜக பிரபலங்கள் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்று வெளியிட்டார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என பலரும், கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது குறித்து காங்கிரஸ் & திமுகவை விமர்சித்து வருகின்றனர். மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கச்சத்தீவு […]
Continue reading …உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. செந்தில்பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அவர் வேலை வாங்கி தருவதாக பெற்ற பணத்தை, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுத்தியதாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக கடந்தாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் […]
Continue reading …பேட்டி ஒன்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கு உயிர் கொடுத்தது நாங்கள் தான் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இணைய பாமக பேச்சுவார்த்தை நடத்தியது. திடீரென பாஜக கூட்டணியில் இணைந்தது. இதனால் கடந்த சில நாட்களாக அதிமுக மற்றும் பாமக தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். பேட்டி ஒன்றில் அன்புமணி ராமதாஸ், “அதிமுகவுக்கு பலமுறை நாங்கள் தான் உயிர் கொடுத்தோம். 1996ல் ஜெயலலிதா […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி! நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் ‘வானொலி’ இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும். மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்? […]
Continue reading …இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாங்கள் அடக்கி வாசிப்பதால் தான் அண்ணாமலையால் பேச முடிகிறது என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்து விமர்சனம் செய்த போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறியதற்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து போக முடிகிறது, அண்ணாமலையும் வாய்க்கு வந்தபடி பேச […]
Continue reading …பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தேர்தல் விதிகளை மீறியதாக 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் […]
Continue reading …வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. 39 தொகுதிகளில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை […]
Continue reading …தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை காளப்பட்டியில் இந்து முன்னணி சார்பில் நடந்த 100% வாக்களிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பின் செய்தியாளர்களிடம், “வேட்பு மனு தாக்கல் குறித்த கேள்விக்கு அரசியல் கட்சிகள் நேரடியாக களத்தில் எதிர்க்க முடியாமல் எப்பொழுதும் வழக்கமான டிராமா வேற்று மொழி கொண்டு வந்துள்ளார்கள் இரண்டு வேட்பு மனுக்கள் சப்மிட் செய்வோம் அரசியல் கட்சிகளுக்கும் முறையாக வைத்துள்ளோம் சீரியல் நம்பர் 15, 27 வேட்பு மனுக்கள் சப்மிட் செய்யப்பட்டுள்ளது, […]
Continue reading …நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன் தேர்தல் நடத்தை விதிகள் மீறியதாக மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, […]
Continue reading …தமிழகம் முழுவதும் திமுக எம்பி கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் அவர் பரவலாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று கரூர் தொகுதியில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த கனிமொழி இன்று கோவையில் பிரச்சாரம் செய்கிறார். அவர் இந்த பிரச்சாரத்தில், “பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. ஏழை விவசாயிகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்கிறது. மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக பாஜக ஆட்சிக்கு வராது. திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி சிக்கல்கள், குளறுபடிகள் […]
Continue reading …