மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்று தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சி தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறது. செய்தியாளரிடம் பேசிய தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, “மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. ஊதிய உயர்வுக்கான அரசாணையை முன்னதாகவே போடப்பட்டிருப்பதால் இந்த […]
Continue reading …நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அச்சப்படமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. வேறு சின்னம் வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்திய தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது. இன்று கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபரை ஆதரித்து சீமான் […]
Continue reading …ஜான்பாண்டியன் மற்றும் கிருஷ்ணசாமி என தென்காசியில் இரண்டு முக்கிய தலைவர்களும் போட்டியிடுவதால், தலித் வாக்குகள் பிரியும் என்றும் அதனால் திமுக வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுகவின் கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி பாஜகவின் கூட்டணி வேட்பாளராக ஜான்பாண்டியன் ஆகியோர் தென்காசி தொகுதியில் போட்டியிடுகின்றனர். மேலும் திமுக சார்பில் ராணி ஸ்ரீகுமார் மற்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதிவாணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில் தலித் வாக்குகள் அதிகம் இருப்பதால், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு […]
Continue reading …80 ஆயிரம் பேர் வேறு கட்சிகளிலிருந்து பாஜகவில் இணைந்திருப்பவதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும். பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறாக தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் […]
Continue reading …விருதுநகர் தொகுதி வேட்பாளர் விஜய பிரபாகரன் அதிமுக தேமுதிக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும் இக்கூட்டணி மக்களவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விருதுநகர் தொகுதியில் கேப்டனின் மூத்த மகன் விஜய பிரபாகரன் களம் இறக்கப்பட்டுள்ளார். விருதுநகரில் தேர்தல் பரப்புரையில் விஜய பிரபாகரன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “எடப்பாடி அண்ணன் எப்போதும் அழகா சிரிப்பாரு, தலைமை […]
Continue reading …தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வைகோவின் வாரிசு அரசியலால் மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் எம்பி கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுக்காததால், அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பேசப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், “ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து […]
Continue reading …பம்பரம் சின்னம் ஒதுக்காதது குறித்து திருச்சி ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ பேட்டி: தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் கொடுக்க மறுத்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அவர்கள் பம்பரம் சின்னம் ஒதுக்குவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒரு வேளை அவர்களும் ஒதுக்கவில்லை என்றால் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம். பா.ஜ.க வை எதிர்க்கும் இயக்கங்களை முடக்கவே இது போன்று வருமான வரி துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க அரசு பயன்படுத்துகிறது.
Continue reading …அண்ணாமலை டி.ஆர்.பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை என்ற கருத்தை வெளியிட்டார். அதற்கு சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் கோவையில் நடந்த பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு அவர் செய்தியாளர்களிடம், “தஞ்சாவூரை சேர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு என்று தனித்திறமை ஏதும் இல்லை. அவரது தந்தை பணம் சேர்த்து வைத்தார். […]
Continue reading …ஐஆர்எஸ் ஆர் அதிகாரி ஒருவர் குடியரசு தலைவருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பணியில் இருந்தபோது கடிதம் எழுதினார். அவர் தற்போது சுயேட்சையாக வட சென்னை தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சேலத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இந்த சம்பவத்தை குறிப்பிட்ட ஐ.ஆர்.எஸ் அதிகாரி பாலமுருகன் என்பவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு […]
Continue reading …