உத்தவ் தாக்கரேவை டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெதர்வால் மனைவி சுனிதா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே சென்று அவரது மனைவி சுனிதாவை சந்தித்துள்ளார். இச்சந்திப்பின்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய […]
Continue reading …காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரியத்தில் இஸ்லாமியர் அல்லாதவர் உறுப்பினராக முடியும் என்பது மத சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் வக்பு வாரிய சட்டதிருத்தம் இஸ்லாமியர்ளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் மக்களவையில் விமர்சித்துள்ளன. மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ முஸ்லிம்களின் சமூக, பொருளாதார நலன்களுக்கான வக்பு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் […]
Continue reading …அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போதைப்பொருள் விற்பனையை தடுக்கத் தவறிய விடியா திமுக முதலமைச்சருக்கு கடும் கண்டனம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் […]
Continue reading …சபாநாயகர் அப்பாவுக்கு, அதிமுக குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகுமாறு எம்.பி -எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஒபிஎஸ் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சசிகலா முயன்றபோது அதற்கு போர்க்கொடி தூக்கினார். இதனால் அதிமுகவில் பிரச்சனை பூதாரகமானது. அதன்பின் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே, எடப்பாடி பழனிசாமி திடீரென சசிகலாவால் முதலமைச்சராக பதவி ஏற்றார். இதனால் அப்போதைய அதிமுக ஆட்சியும் […]
Continue reading …எடப்பாடி பழனிசாமி வருகிற ஆகஸ்ட் 16ம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அவசர செயற்குழு கூட்டம் வருகின்ற 16.8.2024 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும். கழக செயற்குழு […]
Continue reading …ஏற்கனவே 52 முறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் தள்ளி வைக்கப்பட்டது. இன்று 53வது முறையாக தள்ளி வைக்கப்பட்டு நாளை மீண்டும் ஆஜர் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க வேண்டும் என இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து […]
Continue reading …தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நூறு நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கிட வேண்டும், வேலை வழங்க முடியாவிட்டால் சட்டப்படி நிவாரணம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் உடனடியாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை வட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக […]
Continue reading …காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் கடுமையாக எதிர்த்து நாட்டின் மகளுக்கு நீதி வழங்கும் என்ற முழு நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வினேஷ் […]
Continue reading …தேர்தல் ஆணையம் வருகிற செப்டம்பர் 3ம் தேதி காலியாக உள்ள 12 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 245 உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருக்கின்றனர். இவர்களில் 233 பேர் தேர்தல் மூலமும், 12 பேர் நியமன பதவி மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும். பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால், ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட மாநிலங்களவை எம்.பி.க்களாக இருந்த 10 பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் தெலுங்கானா, […]
Continue reading …