Home » Archives by category » இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் ஆகஸ்ட் 8 வரை நீட்டிப்பு!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மக்களவை தேர்தலின் போது பரப்புரை மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்த பிறகு ஜூன் 2ம் […]

நீட் குறித்து சிபிசிஐடிக்கு, நீதிபதி சரமாரி கேள்வி!

Comments Off on நீட் குறித்து சிபிசிஐடிக்கு, நீதிபதி சரமாரி கேள்வி!

இன்று 2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு முகமையிடம், நீதிபதி புகழேந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். சிசிடிவி கேமிரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் […]

Continue reading …

வங்கதேசத்திலிருந்து திரும்பும் இந்தியர்களின் லிஸ்ட்!

Comments Off on வங்கதேசத்திலிருந்து திரும்பும் இந்தியர்களின் லிஸ்ட்!

மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வன்முறையால் பாதிக்கப்பட்ட வங்கதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசத்தில், கல்வி, வேலை வாய்ப்புகளில் 30 சதவீத மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலவரம் வெடித்து, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அங்கு படித்து வந்த இந்திய மாணவ, மாணவிகளை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மீட்டு வருகிறது. டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை […]

Continue reading …

மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது! துரைமுருகன் வலியுறுத்தல்!

Comments Off on மேகதாது அணை கட்ட அனுமதிக்க கூடாது! துரைமுருகன் வலியுறுத்தல்!

தமிழக அமைச்சர் துரைமுருகன் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாய சங்கங்களும், தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகம் – கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்னை […]

Continue reading …

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

Comments Off on மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 9 மீனவர்கள், அவர்களது படகுகளை உடனடியாக விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று முன் தினம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 22 வரை மட்டும் 250 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில், ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட […]

Continue reading …

பைக்குகளை திருடி உதவியவர் கைது!

Comments Off on பைக்குகளை திருடி உதவியவர் கைது!

நண்பனின் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு சிகிச்சையளிக்க பைக்கைகளை திருடி உதவி செய்து வந்த திருடனை போலீசார் கைது செய்தனர். பெங்களூரில் பழ வியாபாரம் செய்து வந்த அசோக், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், பல்சர், கே.டி.எம். வகை பைக்குகளை திருடி விற்று வந்துள்ளார். இதனால் அசோக் அடிக்கடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அசோக்கின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. பெங்களூரு கிரி […]

Continue reading …

மேகதாதுவில் அணை குறித்து மத்திய அரசு விளக்கம்!

Comments Off on மேகதாதுவில் அணை குறித்து மத்திய அரசு விளக்கம்!

மத்திய அரசு மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு இதுவரை எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாவில் அணைக்கட்ட முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனிடையே மேகதாதுவில் அனுமதி கேட்டு மத்திய அரசிடம், கர்நாடகா விண்ணப்பித்து […]

Continue reading …

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

Comments Off on பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னமும் தோற்கடித்தவர்களை பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம் என பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார். முதலமைச்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒருசில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும் என்று சொன்னீர்கள், நேற்றைய பட்ஜெட் பாஜக ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது. அரசை பொதுவாக நடத்துங்கள், இன்னமும் […]

Continue reading …

போராட்டம் செய்த முதலமைச்சர்; கர்நாடகாவில் பரபரப்பு!

Comments Off on போராட்டம் செய்த முதலமைச்சர்; கர்நாடகாவில் பரபரப்பு!

  அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் திடீரென போராட்டம் நடத்தியதில் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் மகரிஷி வால்மிகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த ஊழலில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சம்பந்தபடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி செய்வதாக கூறப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் சித்தராமையா திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். சட்டசபை வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு […]

Continue reading …

பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

Comments Off on பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்!

  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய பட்ஜெட், நாற்காலியைக் காப்பாற்றுவதற்கானது என்றும் கூட்டாளிகளை சமாதானப்படுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சித்துள்ளார். இன்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஏழாவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார். குறிப்பாக ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே கிடப்பில் உள்ள […]

Continue reading …
Page 1 of 174123Next ›Last »