இயக்குனர் மிஷ்கின் “பிசாசு 2” திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவரின் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. படத்தின் போது விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ஆகியோருக்குமிடையே ஏற்பட்ட நட்பின் காரணமாக இப்போது இருவரும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளனர். படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த படம் பிப்ரவரியில் தொடங்குமென சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் […]
நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிட விழாவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்து உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இவ்விழாவை புறக்கணிக்க உள்ளனர். அதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளன. கிட்டத்தட்ட திமுக […]
Continue reading …பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதற்கு அவரது முதல் மனைவி இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவிட்டுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி, இந்தி, தமிழ் உட்பட 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் விஜய்யுடன் இணைந்து, “கில்லி,” விக்ரமுடன் இணைந்து “கந்தசாமி,” ரஜினியுடன் “பாபா,” தனுஷுடன் “மாப்பிள்ளை,” “உத்தம வில்லன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இவர், பழம்பெரும் […]
Continue reading …நடிகர் தனுஷ், ‘பவர் பாண்டி’ மூலம் இயக்குநராக தன்னை நிரூபித்துக் காட்டினார். அறிமுகமான முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்றும் பெயரெடுத்தார். இதையடுத்து அவர் இயக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அந்த படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நடிப்பில் கவனம் செலுத்திய தனுஷ் இப்போது மீண்டும் இயக்குனர் பொறுப்பைக் கையில் எடுக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த […]
Continue reading …சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவனின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. அதோடு மட்டுமல்லாமல் மிக மோசமான ரசிகர்களிடம் இருந்து பெற்று வருகின்றன. தனுஷ் நடிப்பில் “நானே வருவேன்” திரைப்படத்தை இயக்கினார். அவர் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தன. அடுத்து “பகாசூரன்” திரைப்படம் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதற்குப் பின்னர் இன்னும் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. செல்வராகவன் டுவிட்டரில் […]
Continue reading …நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து கமல்ஹாசன் ரஜினிகாந்த் உள்பட பல திரை உலக பிரபலங்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். இன்று சென்னையிலுள்ள சரத்பாபு வீட்டிற்கு அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு சென்னை மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்தனர். கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுக் கொண்ட சரத் பாபு 92 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
Continue reading …நடிகர் சிவகார்த்திகேயன் நான்கு திரைப்படங்கள் தயாரித்து உள்ளார். தற்போது ஐந்தாவது படமாக சூரி நடிக்கும் “கொட்டுக்காளி” திரைப்படத்தை தயாரித்து வருகிறார். படத்தை “கூழாங்கல்” படத்தின் இயக்குனர் வினோத் ராஜ் இயக்குகிறார். சிவகார்த்திகேயனுக்கு சொந்தமான எஸ்.கே. புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். மலையாள நடிகை அன்னாபென் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து விரைவில் ரிலீஸ் செய்யப்படும் தேதி குறித்து அறிவிப்பு […]
Continue reading …இயக்குனர் தேசிங் பெரியசாமி “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு கவனிக்கப்பட்ட இய்ககுனரானார். அவரை சந்தித்து பாராட்டிய ரஜினி தனக்காக கதை தயார் செய்ய சொல்லியிருந்தார். இதற்காக சில ஆண்டுகள் தேசிங் பெரியசாமி ரஜினிக்காக கதையை உருவாக்கினார். அந்த கதை ரஜினிக்கு பிடித்திருந்தாலும், பட்ஜெட் காரணமாக அந்த படம் தொடங்கப்படவில்லை. தேசிங் பெரியசாமி, இப்போது சிம்பு நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. படத்துக்காக […]
Continue reading …நடிகர் சரத்பாபு கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானதாக அறிவிக்கப்பட்டது. இன்று அவர் உண்மையிலேயே காலமானார் என்ற தகவல் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே நடிகர் சரத்பாபு உடல்நல கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நலம் தேறிக் கொண்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திடீரென அவர் காலமானதாக சில நாட்களுக்கு முன் வதந்தி கிளம்பியது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் இது குறித்து விளக்கமளித்தனர். தற்போது […]
Continue reading …“மாமன்னன்” திரைப்படத்தின் முதல் சிங்கில் பாடல் ஏ.ஆ.ரஹ்மான் இசையில், நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இப்பாடலை நடிகர் சூரி பாராட்டியுள்ளார். “கர்ணன்” படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முழுதும் நிறைவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் […]
Continue reading …