Home » Archives by category » தமிழகம்

தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு  சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல்

தன் இன்னுயிரை இழக்கும் தருணத்திலும், பிஞ்சு உயிர்களைக் காப்பாற்றிய ஓட்டுநர் சேமலையப்பன் வீட்டிற்கு  சென்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆறுதல். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி காங்கேயத்தில் அமைந்துள்ள திரு.சேமலையப்பன் அவர்களின் இல்லத்திற்கு நேரடியாக சென்று, அவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திண்டுக்கல்  எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி.

Comments Off on திண்டுக்கல்  எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி.

திண்டுக்கல்  எம்.பி சச்சிதானந்தம் கோரிக்கை வெற்றி. மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம்.எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று செல்லும் என தென்னக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Continue reading …

வெக்காளியம்மன் திருக்கோவிலில் தினம்தோறும் 100-நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா….?

Comments Off on வெக்காளியம்மன் திருக்கோவிலில் தினம்தோறும் 100-நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா….?

வெக்காளியம்மன் திருக்கோவிலில் தினம்தோறும் 100-நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா….? மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மனைவி திருமதி.துர்கா அவர்கள் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஆடி மாத வெள்ளிக்கிழமையான இன்று (26.07.2024) சென்னையிலிருந்து_திருச்சி உறையூரில் அருள்பாலிக்கும் வெக்காளி அன்னையை தரிசித்து செல்கிறார். ஏனென்றால் அன்னையின் அருள் மழை அப்பேற்பட்டது. இப்படியான கருணையே வடிவான காக்கும் தெய்வத்தின் சன்னதியில் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் தினம்தோறும் சுமார் 100-நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி வழங்கி_அதற்கான டோக்கன் […]

Continue reading …

தீண்டாமை அதிகம் நிலவும் மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை.

Comments Off on தீண்டாமை அதிகம் நிலவும் மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை.

தீண்டாமை அதிகம் நிலவும் மாவட்டங்களில் முதலிடத்தை பிடித்துள்ளது மதுரை. தீண்டாமை வன்கொடுமை நிலவும் முதல் 10 இடத்தில் உள்ள மாவட்டங்கள், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர். தீண்டாமை 445 கிராமங்களில் நிலவுகிறது, அவற்றில் அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் 43 கிராமங்களில் தீண்டாமை நிலவி வருகிறது.

Continue reading …

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஒருவர் கைது.

Comments Off on கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஒருவர் கைது.

கொடைக்கானலில் போதை காளான் விற்பனை ஒருவர் கைது. திண்டுக்கல் கொடைக்கானல் பகுதிகளில் போதை காளான் விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி.பெனாசீர் பாத்திமா அவர்களின் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது கொடைக்கானல் பூண்டி பகுதியில் போதைக்காளான் விற்ற பாலமுருகன் (வயது 43) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue reading …

இன்று இரவு சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை!

Comments Off on இன்று இரவு சென்னை உள்ளிட்ட 30 மாவட்டங்களில் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. அவ்வகையில் இன்று இரவு சென்னை உள்பட 30 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு மழை பெய்யும் 30 மாவட்டங்களின் பெயர்கள் பின் வருமாறு: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், […]

Continue reading …

கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

Comments Off on கனிமொழி எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!

திமுக எம்.பி. கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒருங்கிணைந்த இயக்கத்திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி தமிழக அரசு திட்ட அறிக்கை அளித்துள்ளது என மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ பதில் அளித்துள்ளார். திமுக எம்.பி.கனிமொழி கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதி நிலையின் விபரங்கள் குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் தோக்கன் சாஹூ, ‘மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் […]

Continue reading …

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவிக்கு பிரேமலதா எதிர்ப்பு!

Comments Off on உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவிக்கு பிரேமலதா எதிர்ப்பு!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவில் உள்ள மூத்த அமைச்சர்களுக்கே துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் இன்று மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பூந்தமல்லி பகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்குப் பின் […]

Continue reading …

நீட் குறித்து சிபிசிஐடிக்கு, நீதிபதி சரமாரி கேள்வி!

Comments Off on நீட் குறித்து சிபிசிஐடிக்கு, நீதிபதி சரமாரி கேள்வி!

இன்று 2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. தேசிய தேர்வு முகமையிடம், நீதிபதி புகழேந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். சிசிடிவி கேமிரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் […]

Continue reading …

மாஞ்சோலை விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் முடிவு!

Comments Off on மாஞ்சோலை விவகாரம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் முடிவு!

டில்லி தேசிய மனித உரிமைகள் ஆணையம் மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்ற விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. கடந்த 1929-ம் ஆண்டு நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. வரும் 2028-ம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் குத்தகை காலம் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு […]

Continue reading …
Page 1 of 351123Next ›Last »