கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு/ ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு வாடிக்கையாளர்கள் சந்தா தொகை செலுத்த தபால் நிலையங்களுக்கு செல்வதில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அத்தியாவசிய சேவைகள் என்ற அடிப்படையில் சில தபால் நிலையங்கள் செயல்பட்டு வருகிற போதிலும், அவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த வாடிக்கையாளர்கள் அனைவரின் வசதி கருதி, தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தபால் துறையின், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு இயக்குனரகம், […]
Continue reading …சென்னை : கொரோனா நோய் தடுப்பு ஊரடங்கினால் நெல், உளுந்து, பயிறு, காய்கறிகள் உள்ளிட்ட தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வரும் நிலையை மாற்ற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியிருப்பதாவது : விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் சிக்கல் இருந்தால் அவற்றைக் கவனிக்க மாவட்டம் தோறும் சிறப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் நேரடி நெல் […]
Continue reading …கல்வி வள்ளல் செங்கல்வராய நாயகர் 1829 ஆம் ஆண்டு பிறந்தார். அவரது தந்தை பெருமாள் நாயகர், மெட்ராஸ் இராணுவத்தில் (Madras Army) சுபேதார்- மேஜராக இருந்தார். “சர்தார் பகதூர்” என்ற பட்டத்தை அரசாங்கம் அவருக்கு வழங்கி கவுரவித்தது. இவரது தாய் தெய்வயனம்மல். செங்கல்வராய நாயகர் அனைவரிடமும் இனிமையான தன்மையுடன் பழகக்கூடியவர். இவர், கடவுள் மற்றும் பெற்றோர் மீது அதீத பக்தி கொண்டவராக விளங்கினார். அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் கருணை காட்டினார். அவரது தந்தை மரணத்தின்போது, 30 வயதாக […]
Continue reading …சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி நிதியுதவி அளித்துள்ளார். அதில் மத்திய அரசுக்கு 50 லட்சம், மாநில அரசுக்கு 50 லட்சம், பெப்சி யூனியனுக்கு 50 லட்சம், நடன சங்கத்திற்கு 50 லட்சம் மற்றும் மாற்று திறனாளி சிறுவர்களுக்கு 25 லட்சம் அளித்துள்ளார். மீதமுள்ள 75 லட்சத்தை ஏழை தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவ தந்துள்ளார்.
Continue reading …சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, சென்னை- IIT மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா குறித்த சுய தகவல் பதிவு மற்றும் விரைவு நடவடிக்கை அமைப்பின் 94999 12345 என்ற குரல்வழிச் சேவையை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்கள். இந்த குரல்வழிச் சேவையானது, மொத்தஅலைபேசி பயனாளிகளில் நவீன கைபேசியை (ஸ்மார்ட் போன்) பயன்படுத்தாத 60 […]
Continue reading …சென்னை : கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துவரும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் இன்றும் செய்தியாளர்களை சந்தித்தார், அவர் கூறியதாவது : கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 690 லிருந்து 738 ஆக அதிகரிப்பு, இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 48, இதில் 42 நபர்களின் தொற்று புதுடெல்லியில் நடைபெற்ற தப்லிகி ஜமாஅத் மாநாட்டில் இருந்து பெறப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 60,739 பேரும் அரசு கண்காணிப்பில் 230 பேரும் […]
Continue reading …சென்னை : உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிமானவர்கள் பாதிக்கப்பட்டு 70000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உலகையே உலுக்கும் கொரோனா கிருமியை ஒழிக்கப் பாடுபடுவது அனைவரின் கடமை. அந்த வகையில் தானே முன்னின்று மக்களின் சுகாதாரத்தைக் காக்க, நோய்த்தொற்று வராமல் தடுப்பதற்காக தமிழக அமைச்சர் திரு.D.ஜெயகுமார் இரவு பகல் பாராமல் பணி செய்து வருகின்றார். தமிழக அரசு மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு மற்றும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை சிறப்பாகச் செய்து வருகின்றது. தில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் […]
Continue reading …புதுடெல்லி : கொவிட்-19 வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பான பல்வேறு பொய் செய்திகளும், ஆவணங்களும் சமூக ஊடகங்களில் உலா வருகின்றன. இதைக் கண்டுபிடித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் தனிப்பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவு கொவிட்-19 தொடர்பான தகவல்களை உடனுக்குடன் சரிபார்த்து, உண்மையை எடுத்துரைக்கிறது. இன்று அவர்கள் அளித்துள்ள எச்சரிக்கை தகவல்கள். 1. வங்கி மாதத் தவணைகள் செலுத்துவதை தள்ளிப்போடுவதற்கு OTP ஐ சொல்லுங்கள் என்று கேட்கும் சைபர் […]
Continue reading …தமிழ்நாடு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் பரபரப்பாக எழுப்பப்படும் வினா என்னவெனில், வரும் 14-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு ஆணை நீட்டிக்கப்படுமா…. விலக்கிக் கொள்ளப்படுமா? என்பது தான். இந்த வினாவுக்கு மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் விடை எளிமையாக இருக்க வேண்டும் என்பதை விட, எல்லோரையும் காப்பாற்றுவதாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியமாகும். கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் […]
Continue reading …இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் பரவல் எந்த கட்டத்தை அடையக்கூடாது என்று அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்தோமோ, அந்த சமூகப் பரவல் கட்டத்தை நாட்டின் சில பகுதிகள் எட்டியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இத்தகைய நெருக்கடியான காலகட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க, இன்னும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. தில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் இயக்குனரும், மத்திய அரசின் கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா இது குறித்து தெரிவித்திருக்கும் […]
Continue reading …