பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிப்பதற்காக மைதானத்தில் இறைவனை வேண்டுவது தப்பில்லை என்றால் ஜெய்ஸ்ரீராம் முழக்கம் எழுப்புவதும் தப்பில்லை” என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என சில ரசிகர்கள் கோஷமிட்டது பெரும் சர்ச்சையானது. ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்திற்கு அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் “போட்டியில் ஜெயிக்க இறைவனை […]
Continue reading …‘800’ என்ற திரைப்படம் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் படமாக உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இத்திரைப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதையடுத்து விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல் முரளிதரன் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் […]
Continue reading …இன்று நடைபெற்ற டைபிரேக் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது.இப்போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இப்போடியில் உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சமபலத்தில் பிரக்ஞானந்தா போராடினார். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. எனவே டைபிரேக்கர் மூலம் […]
Continue reading …அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. 2வது சுற்றும் தற்போது டிராவில் முடிந்துள்ளது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் […]
Continue reading …முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்கும் என்று நேற்று அட்டவணை வெளியானது குறித்து சில கணிப்புகளை பகிர்ந்து உள்ளார். இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிஐசிஐ 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கோப்பையை வெல்ல […]
Continue reading …அமைச்சர் உதயநிதி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு- என்று கூறியுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் வீராங்கணையருக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கங்கள் பெற்றுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒடிசா […]
Continue reading …ஆசிய வாள் வீச்சு சாம்பியன்ஷிப் போட்டிகள் சீனாவின் வுக்ஸியில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இப்போட்டியில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் 64வது சுற்றில் பவானி தேவி பெற்றார். இதையடுத்து, அடுத்த சுற்றில் கஜகஸ்தானின் டோஸ்பே கரினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையை சுற்றில் பவானி 15-11 என்ற புள்ளிகள் கணக்கில் முன்றாம் நிலை வீராங்கனை ஓசானி செரியை வீழ்த்தினார். இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், 15-10 என்ற கணக்கில் உலக சாம்பியனான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த எமுராவை வீழ்த்தி […]
Continue reading …இந்திய அணி நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அவர் இருக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. அதனால் பலரும் தங்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா குடும்பத்தோடு இப்போது சுற்றுலா […]
Continue reading …ரூ.52 லட்சத்தை வீடியோ கேம் மீதான மோகத்தில் சிறுமி ஒருவர் காலி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் சிறுவர் மற்றும் இளைஞர்களிடையே கேமிங் மோகம் தலை விரித்தாடுகிறது. தீவிரமாக நாள் முழுவதும் கேம் விளையாடுவதால் பலர் உடல்நல பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பணத்தை இழக்கும் சம்பவங்களும் தொடர் கதையாக உள்ளன. சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த சிறுமி மொபைல் கேம் விளையாடுவதில் தீவிர மோகத்தில் இருந்து வந்துள்ளார். புதிய கேம்களை வாங்குவதற்காகவும், கேமில் உள்ள கேட்ஜெட்களை […]
Continue reading …சாக்ஷி மாலிக் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரிஜ்பூஷண் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]
Continue reading …