
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம், தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் மாரியம்மாள், க/பேதங்கவேல் (லேட்) (வயது 70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்தவேதனையடைந்தேன். மேலும் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கனகராஜேஸ்வரி, க/பெ.காட்டு ராஜா […]
Continue reading …
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராகுல் காந்தி பிரதமரானால் ஊழல், மோசடி தான் இந்தியாவின் தலைவிதியாக மாறும் என்று கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்தது. பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகளின் சாதனைகளை விளக்கி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா பல வழிகளில் […]
Continue reading …
நேற்றிரவு ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிரடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு கவர்னருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து தமிழக முதலமைச்சருக்கு ஆளுநர் ரவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த விளக்கத்தில், “கரூரில் நடந்த ஐடி சோதனையின் போது அதிகாரிகள் நடத்தப்பட்ட விதமே விசாரணை தடுப்புக்கு […]
Continue reading …
நேற்றிரவு திடீரென தமிழக ஆளுநர் ரவி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திவுள்ளது. கவர்னரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரை நீக்குவதற்கும் நியமனம் செய்வதற்கும் முதலமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் கூறி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை கவர்னர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அட்டர்னி ஜெனரல் ஆலோசனையை கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதாக […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மாமன்னன்” திரைப்படம் சுத்த ப்ளாப் படம் என்றும், அந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். நேற்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் சூப்பராக இருப்பதாக ஒரு சிலரும் சுமாராக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் படம் வெளியான முதல் நாள்: ரூபாய் ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜி டிஸ்மிஸ் இன்னும் வாபஸ் பெறப்படவில்லை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார். நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை தமிழக கவர்னர் டிஸ்மிஸ் செய்வதாக அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அவரது உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. அவர் தமிழக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த விளக்கத்தில், […]
Continue reading …
காங்கிரஸ் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவை டிரோல் செய்யும் விதமாக வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சி இந்தியாவில் தொடர்ந்து 2வது முறையாக நடந்து வருகிறது. அடுத்த ஆண்டும் பாஜக ஆட்சி முடிவடைகிறது. இதனால் 2024 மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. சமீபத்தில் பாஜக பிரதமர் மோடியின் சாதனைகளை விளக்கி அனிமேஷன் வீடியோ […]
Continue reading …
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார். கடந்து சில நாட்களாகவே தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை ஒரு கிலோ விற்பனையாகி வருகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். தக்காளி உள்பட காய்கறி விலை தொடர்ந்து உயர்ந்தால் […]
Continue reading …
புதிய மேம்பாலம் ஒன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அமைப்பதற்கு ரூபாய் 195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக சென்னையின் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் பல மேம்பாலங்கள் கட்டும் திட்டங்கள் உள்ளன. அவ்வகையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 900 மீட்டர் நீளத்துக்கு புதிய மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபாய் நோட்டு 95 கோடி நிதி ஒதுக்கீடு […]
Continue reading …
இந்திய தேர்தல் ஆணையம் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேலைகளில் இப்போதே அரசியல் கட்சிகள் இந்த தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி இன்று தொடங்கப்படுவதாகவும் […]
Continue reading …