
இன்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்தது. அவரது தரப்பில் என்.ஆர். இளங்கோ என்ற வழக்கறிஞரும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் செய்யப்பட்டன. இவ்வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறியதாவது, “2014&-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை […]
Continue reading …
உள்துறைஅமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமரே நாட்டில் இல்லாத போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறும் போது, “கடந்த 50 நாட்களாக மணிப்ப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரதமர் அமைதி காக்கிறார் தற்போது பிரதமர் நாட்டிலேயே இல்லை இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
வண்டலூர் பூங்காவில் 3டீ மற்றும் 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அருகிலுள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3டீ, 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை […]
Continue reading …
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை வரை தெரிவிக்கவில்லை! இதுவரை ராகுல் காந்தி, மாயாவதி, மு.க.ஸ்டாலின் மற்றும் […]
Continue reading …
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 8ம் தேதி பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுதை அடுத்து வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்றினார். ஆனால் அதே நேரத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை […]
Continue reading …
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர்கள் அரசியல் வரும் சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் என்று கூறியுள்ளார். எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜயகாந்த், டி ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர திட்டமிட்டனர். ரஜினி மட்டும் திடீரென கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். இன்னும் விஜய், விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியல் ஆசையுடன் உலா வருகின்றனர். […]
Continue reading …
அமைச்சர் சி.வி.சண்முகம் “தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதியுடம் கொடுங்கள் பார்ப்போம்” என்று சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர், “அமைச்சர் முத்துசாமி தற்போது மதுவிலக்கு மற்றும் கலால் துறையை கவனித்து வருகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். முதலமைச்சரே உங்களுக்கு தைரியமிருந்தால் கலால் துறையை உங்கள் மகன் உதயநிதியிடம் கொடுங்கள். யாரோ ஒருவருக்கு கலால் துறையை கொடுப்பீர்கள், அவர் கொள்ளையடித்து உங்கள் குடும்பத்திற்கு […]
Continue reading …
தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ‘தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டினேன்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்ற எம்.பிக்கள் தாங்கள் வென்ற தொகுதிகளில் உள்ள குறைகளை சரி செய்யவும், மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தொகுதி மேம்பாட்டு நிதியாக கணிசமான தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதை அனைத்து எம்.பிக்களுமே நல்ல முறையில் பயன்படுத்துவது இல்லை என்ற புகார்களும் உள்ளன. தெலுங்கானா மாநிலம் […]
Continue reading …
காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இதுகுறித்து கூறும் போது, “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றோம். 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 100 பேரை கொண்ட 5 குழுவினர் […]
Continue reading …
செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு விவகாரத்தில் தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் தனது கேவியட் மனுவில் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்பதும், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Continue reading …