
அதிமுக நிர்வாகி ஒருவர் முதலமைச்சரை பற்றி அவதூறான வீடியோ பரப்பிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல்வேறு மீம்ஸ், வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுகின்றனர். சிலர் அவதூறு வீடியோக்கள் பதிவிட்டதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஒரு பதிவிட்டதற்காக நள்ளிரவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஈரோடு […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தமிழ்நாட்டுக்கு “கருணாநிதி நாடு” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி 69வது பிறந்த நாள் கூட்டத்தில் பேசிய அவர் “மதுரையில் நூலகத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்கிறார், சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர், தற்போது கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் கருணாநிதி பெயர் இப்படியே போனால் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்று மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது. கருணாநிதி பெயரை மட்டுமின்றி மற்ற தலைவர்களின் […]
Continue reading …
நேற்று காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை கருத்து தெரிவித்திருந்தார். அதில் பாஜகவுக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். மேலும், அதிமுக பாஜகவின் அடிமை என்றும் கூறியிருந்தார். இன்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னால் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதலமைச்சர் வெளியிட்ட கருத்திற்கு பதிலுரை வெளியிட்டுள்ளார். அதில், “செந்தில் பாலாஜிக்கு பரிந்து பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதட்டத்தோடு பேசுகிறார். இப்பதட்டத்திற்கு என்ன காரணம்? அதிமுகவை முதலமைச்சர் சீண்டிப் பார்க்க கூடாது. இந்த […]
Continue reading …
பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் சாலை இல்லாததால் இளம் பெண்ணின் உடலை பல கி.மீ தொலைவுக்கு மரக்கட்டையில் கட்டி உறவினர்கள் சுமந்து சென்ற அவலத்தை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனில்லாமல் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலுள்ள எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் உடலை அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு சாலை வசதி இல்லாததால், மரக்கட்டையில் கட்டி மலையடிவாரத்திலிருந்து எலந்தம்பட்டு கிராமம் வரை அவரது […]
Continue reading …
நீதிமன்றம் பாஜக தொடங்கிய அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தாராமையா, கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சோக்குமார் ஆகியோர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் வெளியிட்ட சில விளம்பரங்கள் தொடர்பாக ராகுல் காந்தி சித்தாராமையா மற்றும் டி கே சுகுமார் ஆகிய மூவர் மீதும் பாஜக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பாஜகவை சேர்ந்த கேசவ பிரசாத் என்பவர் […]
Continue reading …
வானதி சீனிவாசன் பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், “பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி இவ்வழக்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் […]
Continue reading …
அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை மனித உரிமை ஆணையர் கண்ணதாசனின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி விவகாரத்தில் கவர்னர் ரவி மற்றும் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார். மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் திமுகவின் அனுதாபி, அவர் திமுகவுக்கு ஆதரவாக பல தொலைக்காட்சிகளில் விவாதம் செய்தவர், அவரது அறிக்கை திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் என்று பலர் கூறிவருகின்றனர். அதிமுக வழக்கறிஞர் இன்பதுரையும் அதே கருத்தை […]
Continue reading …
சிறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண்ணை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புழல் சிறையிலிருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் எண், சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள வார்டை சுற்றி ஏராளமான ஆயுதப்படை காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும், அமைச்சர் செந்தில்பாலாஜியை பார்வையாளர்கள் பார்க்க புழல் சிறைத்துறை அதிகாரிகளின் ஒப்புதலோடு […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நடிப்புக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட உடனே அமைச்சர் செந்தில் நெஞ்சுவலி என்று கூறியதா£ல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நலம் குறித்து கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் “30 சதவீதம் அடைப்பிற்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளையே தொடங்காதப் பற்றி பேசினார். சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, மருத்துவப் பணியாளர்களுடன் இணைந்து திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உரையாற்றினார்.அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “கருணாநிதி என்றாலே கிங் தான். கிண்டில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு கலைஞர் பெயர் தான் பொருத்தம். வாழ்ந்த காலம் முழுவதும் […]
Continue reading …