பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் திராவிட மாடலில் கிக் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள், நிவாரணம் அறிவிப்பதில் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை வ.உ.சி பூங்காவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார். பின் செய்தியாளர்களிடம் அவர், “சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் பேச முற்படும் போது முழுமையாக பேச விடுவதில்லை. சட்டமன்றத்தில் நாங்கள் பேசிய வீடியோக்களை கேட்டால் வெட்டியும், ஒட்டியும் கொடுக்கிறார்கள் […]
Continue reading …உலக மருத்துவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. என்பதும் அன்றைய தினம் மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று உலக மருத்துவ தினத்தை முன்னிட்டு தனது வாழ்த்து செய்தியில், “உலகின் ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான் அவர்களின் சேவை போற்றப்பட வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு அடுத்தபடியாக உன்னத சேவை செய்பவர்கள் மருத்துவர்கள் தான். உலகின் ஆக்கும் சக்தி […]
Continue reading …தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நாளை அண்ணா பல்கலைக்கழக நடைபெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. நாளை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்ள மாட்டார் என்றும் அவர் இந்த விழாவை புறக்கணிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நாளை பல்கலைக்கழக வேந்தர் […]
Continue reading …முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீட் தேர்வு வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை கொண்ட மாநில கல்விக் கொள்கை அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து. மேலும் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி கடந்த 2022ம் ஆண்டு மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 […]
Continue reading …அதிரடியாக தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ககன்தீப் சிங் பேடி மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு வனத்துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வி துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக இருந்த மணிவாசன் நீர் வளத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீர்வளத்துறை […]
Continue reading …செந்தில் பாலாஜி தரப்பில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரி மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்கிறார் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி தரப்பு வாதத்திற்காக விசாரணை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து ஒரு வருடத்திற்கு மேல் […]
Continue reading …மக்களவையில் ராகுல் காந்தி இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் ராகுல் காந்தி பேசியபோது, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் குறுக்கிட்டு பேசியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துடன் இன்று மக்களவை கூடியது. விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜக 24 மணி நேரமும் வெறுப்பை காட்டி வருகிறது என்று ஆவேசமாக கூறினார். மேலும் ராகுல் […]
Continue reading …சென்னை மாநகர காவல்துறை இன்று நடைபெற உள்ள அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முக்கியமானது. மேலும் காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது […]
Continue reading …45 ஊராட்சிகள் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ளன. இப்பகுதியில் 19 கவுன்சிலர்கள் பதவி வகித்து வருகிறது. ஒன்றிய பெருந்தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரியும், துனை தலைவராக பா.ஜ.கவை சேர்ந்த ராஜா என்பவரும் திமுகவை சேர்ந்த 8 கவுன்சிலர்களும் பதவி வகித்து வருகின்றனர். இங்கு வட்டார வளர்ச்சி அலுவலராக உமாராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒன்றியங்களுக்கு அரசிடம் இருந்து நலத்திட்டங்களுக்காக முறையாக நிதி பெற்று தரவில்லை. இதனால் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. […]
Continue reading …இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஓசூரில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் பேசினார். “தமிழகம் நோக்கி உலக நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைக்கிறது. இந்தியாவின் முதல் ஏற்றுமதி மாநிலமாக […]
Continue reading …