
தேமுதிக தலைவரான விஜயகாந்த் பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும்- என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வறுமையால் இரண்டு உயிர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது. தனி ஒருவனுக்கு உணவு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையில் […]
Continue reading …
தேமுதிக பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவின் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெரினா நடுக்கடலில் பேனா சிலை வைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகள் கூறிய நிலையில் நான்கு சுவற்றுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யாரையும் சீண்டாமல் விதிகளை கடைபிடித்து பேரணியை நடத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை […]
Continue reading …
நடிகர் கமலஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பல துறைகளிலும் செயலாற்றி வருகிறார். “விக்ரம்“ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், “இந்தியன் 2,” மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார். இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் கமலுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கமல்ஹாசன் இயக்குனர்கள் சந்தானபாரதி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோருடன் […]
Continue reading …
உச்சநீதிமன்றத்தில் பிபிசி-ஐ இந்தியாவில் தடை விதிக்க வேண்டுமென தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. “இந்தியா தி மோடி கொஸ்டீன்” என்ற ஆவணப்படம் சமீபத்தில் பிரதமர் மோடி குறித்து பிபிசி தயாரித்து வெளியிட்டது. இந்த ஆவணப்படம் வெளியான நிலையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டு, இப்படத்தைப் பகிரவும் சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வெளியிட்டத்திற்கு பிபிசி நிறுவனத்திற்கு பாஜக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியா முழுதும் இதுபேசுபொருளாக மாறியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த […]
Continue reading …
தமிழ்நாட்டிற்கு முதல்முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டவுடன் திரௌபதி முர்மு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி இந்திய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்றார். குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் முதல் பழங்குடியின அரசியல்வாதி மற்றும் இரண்டாவது பெண் இவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 15வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்று கொண்ட திரௌபதி முர்மு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் பிப்ரவரி பிப்ரவரி […]
Continue reading …
ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர் புகழேந்தி ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்கவில்லை என்றால் அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்க வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக வேட்பாளராக தென்னரசு ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கவிருப்பதால் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கடும் சவால் கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு பெற்ற தென்னரசு வேட்பாளருக்கு ஓபிஎஸ் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரோட்டில் […]
Continue reading …
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் “நீங்கள் எவ்வளவு தான் சேற்றை வாரி இறைத்தாலும், சேற்றில் தான் தாமரை மலரும்” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு இடையே பிரதமர் மோடி பேசியதாவது:& “எதிர்கட்சியினருக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவுதான் சேற்றை வாரி இறைத்தாலும் சேற்றில் தான் தாமரை மலரும் என்பதை மறந்து விட வேண்டாம். பாஜக அரசு செயல்படக்கூடிய அரசு என மக்கள் நம்புகிறார்கள். மேலும் பாராளுமன்றத்தில் நடக்கும் விஷயங்களை […]
Continue reading …
நடிகர் பிரகாஷ்ராஜ் “காஷ்மீர் பைல்ஸு”க்கு ஆஸ்கர் இல்லை, பாஸ்கர் கூட கிடைக்காது” என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்து அமைப்புகள் பலவும் “பதான்” திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்ததையும் மீறி படம் வெற்றி பெற்றுள்ளது. ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து சமீபத்தில் வெளியான படம் “பதான்.” ஆரம்பத்தில் இதன் பாடல்கள் வெளியானபோது தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து படத்தை தடை செய்ய வேண்டும் என பல […]
Continue reading …
கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் மூத்த தலைவரும் 2 முறை முதலமைச்சராக இருந்தவருமான உம்மன் சாண்டி தொடர்ந்து 52 ஆண்டுகளாக தொடர்ந்து கேரள மாரிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். அவருக்குத் தொண்டை புற்று நோய் ஏற்பட்ட நிலையில், இதற்காக ஜெர்மனி நாடு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின்னர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார். நேற்று திடீர் […]
Continue reading …