
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை அடக்குறதுதான் நல்லது என்று பேசியுள்ளார். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் கடந்த சில காலமாக மக்கள் பலர் பணத்தை இழப்பதும், அதனால் கடன் தொல்லைக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் தொடர் கதையாகி உள்ளது. தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி […]
Continue reading …
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார். இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி 2வது முறையாக பதவியேற்றார். பிரதமர் மோடியின் […]
Continue reading …
இன்று பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நான்காவது நாளாக முடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதானி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என எதிர்கட்சி எம்பிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புக்கொள்ள அளிக்கவில்லை என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஸ்தம்பித்து வருகின்றன. இந்த நிலையில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் […]
Continue reading …
பாஜக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதரவு யாருக்கு என்பது குறித்த அறிக்கையை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். வரும் 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்தது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் இருவரில் […]
Continue reading …
தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய அரசை “மேக் இன் இந்தியா அல்ல, ஜோக் இன் இந்தியா” என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தெலுங்கானாவின் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் நடந்த பேரணியில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் ஜோக் இன் இந்தியா திட்டம்தான். காங்கிரஸ் 54 ஆண்டுகளாக ஆட்சி செய்தது, பாஜக 16 ஆண்டுகள் ஆட்சி செய்தது மொத்தத்தில் இந்தியாவை […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு கவர்னர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட […]
Continue reading …
போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை என்.டி.ஆர் மாவட்டத்தில் கவுராவரம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் கிராமவாசி ஒருவருடன் போலீஸ் கான்ஸ்டபிள் தென்னேரு வெங்கடேஷ்வரலு என்பவர் அவதுறாக பேசியுள்ளார். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசிய அந்த போலீஸ் கான்ஸ்டபிள் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியிருந்துள்ளார். அதை வீடியோ எடுத்த நபர் அதுகுறித்து சிலாகல்லு போலீஸ் […]
Continue reading …
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து பதிலளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக கட்சியின் வேட்பாளர் குறித்து இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே முரண்பாடுகள் நிலவி வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் […]
Continue reading …
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ்ஐ வரவழைத்து இன்னொரு பொது குழு கூட்டி, அந்த பொதுக்குழு கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என அதிமுக பொது குழு வழக்கில் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இன்று நீதிமன்றத்தில் அதிமுக பொது குழு விசாரணை நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வாதாடி வருகின்றனர். இந்த வாதத்திற்கு பின்னர் ஓபிஎஸ் தரப்பினர் உள்ளடக்கிய பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை […]
Continue reading …
பல கட்சிகளிலும் மாறி மாறி இருந்த பழ.கருப்பையா தற்போது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது புது கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அக்கட்சிக்கு தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்று பெயரிட்டுள்ளார். தனது கட்சிக்கான முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம். கட்சியின் […]
Continue reading …