
அமைச்சர் சிவசங்கர் அனைத்து பேருந்துகளிலும் ஜீபிஎஸ் கருவி பொருத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு சென்னை பஸ் செயலி மூலம் பேருந்துகளின் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. பேருந்து இருப்பிட விவரத்தை செயலி மூலமாக பயணிகள் அறிந்து கொள்ளவும் பாதுகாப்பு கருதி தங்களது உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும் இந்த வசதி உதவும். இந்த செயலி மூலம் […]
Continue reading …
பாஜகவினர் டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டில்லியில் அரசு நிதிபெற்று இயங்கி வரும் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு ஊதியம் வழங்க கோரி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன் பாஜக எம்எல்ஏக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளாக டில்லியில் உள்ள கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வரவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கெஜ்ரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்புவது குறித்து […]
Continue reading …
மத்திய இணையமைச்சர் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு பயண செலவு ரூ.22.76 கோடி என்று தெரிவித்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்தாண்டு வரை 21 முறை பிரதமர் மோடி வெளி நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமர் மோடி வெளி நாடு பயணம் செய்தது பற்றியும் அதற்காக செலவு பற்றியும் மத்திய இணை அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், 2019ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடி 21 வெளி நாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். […]
Continue reading …
ஓபிஎஸ் தன்னிடம் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு வந்தால் அவருக்காக கையெழுத்து போடுவேன் என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஓபிஎஸ் தனியாக வேட்பாளரை நிறுத்தி இருக்கும் நிலையில் இரட்டை இலை சின்னம் கேட்டு வந்தால் கையெழுத்திடுவேன் என்றும் இடைத்தேர்தல் தொடர்பாக சசிகலாவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் தமிழக மக்களும் […]
Continue reading …
ஓபிஎஸ் மகனான ஒபி ரவீந்திரநாத் எம்பிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக மக்களவை எம்பி என்று குறிப்பிட்டு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அதிமுக எம்பி ஆக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என […]
Continue reading …
பாஜக தொண்டர்கள் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த சில காலமாகவே பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை விஷயங்கள் தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி சர்ச்சையானது. அதை தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்த காய்த்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சமீபமாக பாஜக முன்னாள் பிரமுகர்கள், மாற்று கட்சியினரால் பாஜக தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதற்கு பாஜக தொண்டர்கள் பலரும் கமெண்ட் செய்வதால் […]
Continue reading …
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நல்லகண்ணு தனது 97வது பிறந்தநாளை கொண்டாடினார். வயோதிகம் மற்றும் சில உடல் நலப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நல்லகண்ணு. அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து […]
Continue reading …
டிடிவி தினகரன் அதிமுகவின் இந்த நிலைமைக்கு டில்லி பாஜகதான் காரணம் என்று கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுகவின் தற்போதைய நிலைமைக்கு டெல்லி பாஜக தான் காரணம் என்றும் பாஜக நினைத்தால் அதிமுக ஒருங்கிணைந்துவிடும் என்றும் கூறியுள்ளார். அதிமுக தற்போது நான்கு பிரிவுகளாக இருப்பதாக கூறப்படுகிறது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக, ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக மற்றும் தினகரன் சசிகலா ஆகிய பிரிவுகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிமுக இந்த […]
Continue reading …
ஓபிஎஸ் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் திமுக தொண்டர் ஒருவர் மீது கல்லை வீசியெறிந்த சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் இன்று நடக்க இருந்த மொழிப்போர் தியாகிகள் தின நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிலையில் நேற்று அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது அந்த பகுதியை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் ஆவடி நாசர், அங்கு சேர் போடாததை கண்டு அங்குள்ளவர்களை ஒருமையில் திட்டியதுடன், கற்களையும் வீசி எறிந்தார். இந்த சம்பவம் […]
Continue reading …
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கமல்ஹாசனின் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.எஸ்.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக அந்தக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார். சென்னையின் தனது கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுவதற்கு முன்பாக வாசிக்கப்பட்ட அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் […]
Continue reading …