
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். 84 வயதான துரைமுருகன் காய்ச்சல் என்றும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் காய்ச்சல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் […]
Continue reading …
விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் சோலார் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பதிலளித்தார். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சோலார் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சியினரை ஆளுனரை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று அறிவிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று சட்டமன்ற கூட்டத்தில் ஆளுனர் உரையை முழுமையாக வாசிக்காதது குறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுபோல ஆளுனரை திமுகவினர் அவமானப்படுத்திவிட்டதாக அதிமுக, பாஜக கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இன்று குடிமைப்பணி தேர்வர்களுடன் கலந்துரையாடலில் […]
Continue reading …
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். இன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், “தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்தது கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அது தவறுதான் என்று ஆளுநர் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கும் செயலாக உள்ளது. […]
Continue reading …
நேற்று இவ்வாண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கொடுத்த உரையை ஆளுனர் முழுமையாக வாசிக்கவில்லை. அவர் உரையை வாசிக்கும்போது, தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட பெயர்களை வாசிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விவாதம் எழுந்த நிலையில் ஆளுனர் திடீரென்று சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து சமூக வலைதளங்களிலும், அமமுக பொதுச்செயலாளர் தினகரன், ஓபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆளுனரின் […]
Continue reading …
ஆண்டுக்கு 7200 ரூபாய் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 200 ரூபாய் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300 அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாதவர்களுக்கு 400 ரூபாயும் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 600 ரூபாய் உதவித் தொகையாக […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கருணைக்கொடை ரூபாய் 3000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணை கொடையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் பணியாளர்கள் தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
Continue reading …
மத்திய வருவாய் புலனாய்வால் செம்மரக்கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரிடம் விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிக்கடி தமிழர்கள் ஆந்திர போலீசாரால் செம்மர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். செம்மரம் கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரன் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாஸ்கரன் இடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றதாகவும் நடத்தி வந்த பர்னிச்சர் கடையில் இருந்து ரூபாய் […]
Continue reading …
இன்று போராட்டம் நடத்தும் ஒப்பந்த செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களின் பணி காலம் முடிந்து விட்டதை அடுத்து தங்கள் பணியை நீட்டிக்க வேண்டும் என்று 2300க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் செவிலியர்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதன்படி, “இன்று மாலை 3 மணிக்கு […]
Continue reading …
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் சிக்கன் மற்றும் பழங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாணவ மாணவிகளின் ஊட்டச்சத்து கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுகள் சிக்கன் மற்றும் பாலங்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் சாதம் பருப்பு காய்கறிகள் சோயா பீன்ஸ் முட்டை ஆகியவை வழங்கப்படுகின்றன. ஜனவரி முதல் […]
Continue reading …