Home » Archives by category » அரசியல் (Page 144)

பிரதமர் மோடியின் டுவிட்!

Comments Off on பிரதமர் மோடியின் டுவிட்!

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை பதிவு செய்துள்ளார். ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் தென்னிந்தியாவின் ஜான்சி ராணி வீர மங்கை வேலு நாச்சியார். 18ம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மகாராணியாக இருந்த இவர் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். பிரதமர் மோடி வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள் குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வீரமங்கை […]

Continue reading …

அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!

Comments Off on அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!
அன்பழகன் சிலை அமைக்க தடை; வழக்கில் திடீர் திருப்பம்!

முன்னாள் அமைச்சர் அன்பழகன் சென்னை டிபிஐ வளாகத்தில் சிலையமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் கல்வி அமைச்சர் அன்பழகனுக்கு சென்னை டிபிஐ வளாகத்தில் சிலை வைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அன்பழகன் சிலை அமைக்க தடை கோரி கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர இருந்தது. திடீரென மனுதாரர் பழனிச்சாமி தனது […]

Continue reading …

ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படுமா?

Comments Off on ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்று பணி வழங்கப்படுமா?

செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். இவர்களுக்கு மாற்று பணி வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். கொரொனா வைரஸ் நோயின் பாதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் நாடு முழுவதும் அதிகரித்த போது, தமிழகத்தில் சுகாதார சேவைகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலரும் நியமிக்கப்பட்டனர். கடந்த 2 ஆண்டுகளாக 2,300க்கும் அதிகமான ஒப்பந்த செவிலியர்கள் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்களது ஒப்பந்த காலம் டிசம்பர் 31ல் முடிவடைந்தது. அவர்களது […]

Continue reading …

பாமக இளைஞரணி தலைவர் ராஜினாமா!

Comments Off on பாமக இளைஞரணி தலைவர் ராஜினாமா!

பாமக இளைஞரணி தலைவரான முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் சற்று முன்னர் ராஜினாமா செய்து விட்டதாக தகவல் பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்ட ஜிகே மணியின் மகன் ஜிகேஎம் தமிழ்குமரன் லைகா நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். ஜேகேஎம் தமிழ்குமரன் பாமக இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமாதாஸ் எழுதிய கடிதத்தில், “பெருமதிப்பிற்குமுரிய […]

Continue reading …

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தொகை எப்போது?

Comments Off on குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 தொகை எப்போது?

திமுக தரப்பிலிருந்து தேர்தலுக்கு முன் தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக அரசு ஏற்பட்டு தற்போது 2 வருடங்களாகியும் இன்னும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை தமிழகத்திலுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தொகை தருவது எப்போது என்பது குறித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திமுகவின் கொடுத்த வாக்குறுதி நிச்சயம் நிறைவேற்றப்படும். இத்திட்டம் தொடர்பாக […]

Continue reading …

ஜனவரி முழுவதும் ‘தமிழ் சங்கமம்’!

Comments Off on ஜனவரி முழுவதும் ‘தமிழ் சங்கமம்’!

தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சியை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் நிகழ்ச்சியை திமுக எம்.பி. கனிமொழி நடத்தி வந்தார். ஆனால் அதிமுக ஆட்சி வந்தவுடன் அந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. தற்போது மீண்டும் திமுக ஆட்சி வந்தவுடன் மீண்டும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் முழுவதும் விழாக்கோலம் பெறும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜனவரி 13 முதல் […]

Continue reading …

டிடிவி தினகரன் டுவிட்!

Comments Off on டிடிவி தினகரன் டுவிட்!

டிடிவி தினகரன் திமுக தமிழக மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருவருதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து இந்தியாவில் கொரொனா பரவி தமிழகத்தில் பாதிப்புகள் ஏற்பட்டது. கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பரமரிக்கவும் செவிலியர்கள் கூடுதலாகத் தேவைப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போது தேர்தல் அறிக்கையில் திமுக கட்சி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறினர். இன்னும் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யாதது குறித்து அமமுக கட்சி பொதுச்செயலாளர் […]

Continue reading …

மூன்று கோவில்களில் நாள்முழுதும் அன்னதானம்!

Comments Off on மூன்று கோவில்களில் நாள்முழுதும் அன்னதானம்!

தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியமான கோவில்களான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகிய கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதான திட்டம். தற்போது இத்திட்டத்தில் 754 கோவில்களில் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம், பழனி கோவில்களில் நாள் முழுதும் அன்னதான திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் மற்றும் […]

Continue reading …

பிரதமரின் தாயாரின் இறப்புக்கு பிரமுகர்களின் இரங்கல்!

Comments Off on பிரதமரின் தாயாரின் இறப்புக்கு பிரமுகர்களின் இரங்கல்!

கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் இன்று குஜராத்தில் நடைபெற்றது. குஜராத் சென்ற பிரதமர் மோடி தனது தாயின் இறுதி காரியங்களில் கலந்து கொண்டு மகனாக தனது கடமைகளை நிறைவேற்றினார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதர மாநில முதல்வர்கள், அரசியல் தலைவர்கள், […]

Continue reading …

இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Comments Off on இபிஎஸ் குறித்து ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் மட்டுமே நியாயமான பதவிகள் என்றும் ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுமென்றே செயற்கையான பதவிகளை உருவாக்கினார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், “அதிமுக சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை இணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் மூலம் தான் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளை செயற்கையாக […]

Continue reading …