
சென்னையில் 4 வது நாளாக தமிழ் நாட்டிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சம வேளைக்கு சம ஊதியம் கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஆசிரிரியர்கள் கூறினர். தற்போதுவரை 100க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இடைநிலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பேச்சு வார்த்தையின் போது […]
Continue reading …
உலகளவில் பணக்காரர்களின் டாப் 10 பட்டியிலில் இருக்கும் அதானி தனது வெற்றிக்கு பிரதமர் மோடி காரணமில்லை என்று கூறியுள்ளார். இந்தியாவிலுள்ள மிகப்பெரிய பணக்கார் கவுதம் அதானி. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைத்தொடர்பு என பல துறைகளிலும் வெற்றி பெற்று முன்னணி தொழிலதிபராக உள்ளார். இவர், இந்தியாவில் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி ஆசியாவிலும் மிகப்பெரிய பணக்காரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். 137.4 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் பெரும் செல்வந்தராகவும் […]
Continue reading …
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார். அவர் தனது டுவிட்டரில், “நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள அரசாணை எண் 152 காரணமாக தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளிலும் 20 வகை பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அரசாணை அரசாணை அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, வரி வசூல் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கப்படும். மேலும் இப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் […]
Continue reading …
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துணை முதலமைச்சருக்கு நிகராக உதயநிதி செயல்படுகிறார்- என்று பாராட்டியுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை அமைந்துள்ளது. ஓராண்டிற்குப் பிறகு, திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான உதயநிதி கடந்த 14ம் தேதி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியேற்றார். அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறிய நிலையில் தன் […]
Continue reading …
இன்று அதிமுக கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம் என மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர். இன்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை போலவே நாடாளுமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என அனைத்து மாவட்ட செயலாளர்களும் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பேசிய நத்தம் விசுவநாதன் பொருள்களில் போலியான பொருட்கள் இருப்பதை பார்த்திருக்கிறோம். […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரிக்கப்பட்ட வரலாறுகள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளவதை குறித்து பேசியுள்ளார். பிரதமர் மோடி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், “திரிக்கப்பட்ட வரலாறுகளை நம்மிடம் கொடுத்து நமக்கெல்லாம் தாழ்வு மனப்பான்மை உண்டாக செய்துவிட்டார்கள். பண்டைய இந்தியாவின் அற்புதமான வரலாறு நமக்கு பெருமையையும், தன்னம்பிக்கையையும் கொடுத்திருக்க வேண்டும்’ என பேசியிருந்தார். இன்று இந்திய வரலாற்று பேரவையின் 81வது மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “கற்பனை கதைகளை வரலாறுகளாக சிலர் கூறுவதை ஏற்கக்கூடாது. இவ்வாறான வரலாற்று திரிபுகள்தான் […]
Continue reading …
கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுநோய் பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்தது. ஆனால், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎப்-7 ஒமைக்கான் பரவலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய […]
Continue reading …
அமலாக்கத்துறை முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவுக்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஆ.ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 16 பேருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. திமுக எம்.பி. ராசாவின் பினாமி நிறுவனத்திற்கு சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 45 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை அறிவித்துள்ளது. முறைகேடான பண பரிமாற்றம் மூலம் […]
Continue reading …
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார். இப்பயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஒற்றுமை பயணம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாலிவுட் பிரபலங்கள் முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். அவ்வகையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் ராகுல் காந்தியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் உள்ளிட்ட பல புகைப்படங்கள் […]
Continue reading …
அமைச்சர் கீதா ஜீவன், வீடு மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர். பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பாவின் வாகனம் மற்றும் இல்லத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டுவிட்டரில், “திமுகவின் அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சோம். தொடர்ச்சியாக பாஜகவின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் திமுகவினரின் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கின்றேன். அமைச்சர் கீதா ஜீவனின் தூண்டுதலின் […]
Continue reading …