
ஆளுங்கட்சியான திமுகவை “முடிசூட்டு விழா’’…. இதுதான் திராவிட மாடலின் சாதனை? – என விமர்சனம் செய்துள்ளார். அதிமுக கட்சி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், தினகரன் தலைமையிலான 3 பிரிவாகப் பிரிந்துள்ளது. அவ்வப்போது, சசிகலா அறிக்கைகளை வெளியிட்டும், ஆளுங்கட்சியான திமுகவை விமர்சித்தும் வருகிறார். இன்று உதயநிதி எம்.எல்.ஏ. அமைச்சராகப் பதவியேற்கிறார். இதுகுறித்து சசிகலா ஓரறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து, அவர்களை நம்பவைத்து, ஆட்சிக்கட்டியில் அமர்ந்து […]
Continue reading …
நடிகர் சரத்குமார் பூரண மதுவிலக்கு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஆன்லைன் ரம்மி குறித்து பேசியுள்ளார். நடிகர் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சி தலைவராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் ஒலித்து வரும் நிலையில் சரத்குமார் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடித்து வருவது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இன்று பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி சமத்துவ மக்கள் கட்சி சென்னையில் போராட்டத்தில், “நான் விளம்பரத்தில் சொல்வதால்தான் ஆன்லைன் […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி உதயநிதி அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி பதவியேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடிசூட்டு விழா நடைபெற இருக்கிறது. மிகப் பெரிய தியாகத்தைச் செய்தே நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடிசூட்டு விழா […]
Continue reading …
தொழிலதிபர் ஒருவர் போலி சிபிஐ அதிகாரிகள் நடத்திய ரெய்டில் பணத்தை இழந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்துள்ளது. காவல்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போல போலியாக நடித்து ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல்கள் ஆங்காங்கே அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. சமீபத்தில் மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேற்கு வங்காளத்தின் பொவானிப்பூரில் உள்ள ரூப்சந்த் முகர்ஜி லேன் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் வாத்வா. இவர் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் […]
Continue reading …
முதலமைச்சர் நிதிஸ்குமார் வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராகத் போட்டியிடுவது குறித்து அறிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த அரசின் மீதான நம்பிக்கை மீதான வாக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில், பெரும்பான்மைக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் நிதிஸ்குமாருக்கு 160 எம்.எல்.ஏக்கள் […]
Continue reading …
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் மக்களும் மகேசனும் அழைத்தால் அரசியலுக்கு வருவேன் என பேட்டியில் கூறியுள்ளார். இன்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை சரவணா ஸ்டோர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம், “தனது அடுத்த படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இயக்குனர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளிவரும். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது தற்போது டிரண்டாகியுள்ள நிலையில்தான் அரசியலுக்கு வர வேண்டுமா வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” அவர் […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ஜெயிலர்.” படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இன்று ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு “ஜெயிலர்” பட முக்கிய அறிவிப்பு மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், […]
Continue reading …
மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தத்தை அளிப்பதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்படியாக முதலமைச்சர் பயணம் செய்த காரில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளங்களில் கிண்டலான முறையில் வைரலானது. அமைச்சர் சேகர்பாபு முதலமைச்சரின் காரில் சென்னை மேயர் பிரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் பற்றிய விளக்கத்தில், “மேயர் பிரியா […]
Continue reading …
ஆளுநர் வீட்டு அலமாரியில் திமுக ஆட்சியில் இயற்றப்பட்ட மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருப்பதாக டிஆர் பாலு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் இன்று வெளிநடப்பு செய்துள்ளனர். இதையடுத்து பாராளுமன்ற வளாகத்தில் திமுக எம்பி டிஆர் பாலு அளித்த பேட்டியில், “திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து 23 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மசோதாக்களை அலமாரிகள் வைத்துக்கொண்டு ஆளுநர் கையெழுத்து போடாமல் இருக்கிறார். வளர்ந்த நாடுகளில்கூட ஆன்லைன் […]
Continue reading …
பாஜக குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12ம் தேதி பதவியேற்கிறார் என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலையில் […]
Continue reading …