
திமுக அரசு பால்விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலைக்கு வழி வகுத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆவினின் ப்ரீமியம் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு ரூ.12 உயர்த்துவதாக ஆவின் அறிவித்துள்ளது. இதனால் ஆவின் ஆரஞ்சு நிற ப்ரீமியம் கொழுப்புசத்து நிறைந்த பால் பாக்கெட் ஒரு லிட்டரின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூ.46க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டைதாரர்களாக இல்லாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு […]
Continue reading …
அமைச்சர் பொன்முடி விருப்பம் உள்ளவர்கள் இந்தி கற்கலாம் என தெரிவித்திருக்கிறார். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருபக்கம் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாகவும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. திமுக மட்டுமன்றி அதன் கூட்டணி கட்சிகளும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று விழுப்புரம் அரசு சட்டக் […]
Continue reading …
ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்திற்கு பிரதமர் வந்தால் அவரை சந்திக்க இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்று மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டியின் போது, தமிழகத்துக்கு வரும் பிரதமரை நீங்கள் சந்திப்பீர்களா? என்று கேள்விக்கு, “தமிழகத்திற்கு பிரதமர் வருவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அப்படி வந்தால் கண்டிப்பாக அவரை சந்திப்பேன்.” என்றார். மேலும் கவர்னர் பதவி விலக வேண்டுமென திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, “தற்போது கவர்னர் குறித்து […]
Continue reading …
ராகுல்காந்தி தேச ஒற்றுமையை வலியுறுத்தி பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல்காந்தி, சமீபத்தில், கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பயணத்தை, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வழியே பயணித்து காஷ்மீரில் நிறைவு செய்யவுள்ளார். தற்போது ராகுல்காந்தி தெலுங்கானாவில் பாதையாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, அவரைப் பார்த்த காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் உற்சாகமடைந்தனர். பின்னர், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநில பழங்குடியின கலைஞர்கள் ராகுல் காந்தியை வரவேற்று நடனமாடினர். […]
Continue reading …
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் “காந்தாரா” திரைப்படத்தை பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ளார். இத்திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படம் வெறும் 20 கோடி செலவில் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நேற்று பெங்களூரில் உள்ள திரையரங்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்த்தார். அதன் பிறகு அவர் இயக்குனர் ரிஷப் […]
Continue reading …
இன்று சென்னை கோடம்பாக்கத்தில் மேற்கு வங்க கவர்னர் இல கணேசனின் சகோதரரின் 80வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகிய மூவரும் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் மூவரும் சந்திப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்னை வந்தார். இந்நிலையில் இவ்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் புதுவை […]
Continue reading …
இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். அதன்பிறகு செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இந்த சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை என்றும் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்த மம்தா பானர்ஜி சந்தித்த நிலையில் தேசியளவில் மாற்றம் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்குமென்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளரிடம், “இது ஒரு மரியாதை […]
Continue reading …
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜதான் பொதுமக்களின் கட்சி என்றும், காங்கிரஸ் கட்சி மன்னர்கள், ராணியின் கட்சி என்றும் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அந்த மாநிலத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியபோது காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராக வேண்டும் என்றால் நீங்கள் மன்னர் அல்லது ராணியின் மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மன்னர்கள் மற்றும் […]
Continue reading …
டி.ஆர்.எஸ். கட்சி, சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாதவர் ராகுல் காந்தி என்று பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலுங்கானா சமிதி கட்சி தேசிய கட்சியாக உருவானது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெலுங்கானா சமிதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று அவர் சர்வதேச கட்சியை நடத்துவதாக நினைத்துக் கொள்ளலாம் என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெலுங்கானா அமைச்சர் […]
Continue reading …
பாஜக தலைவர் சென்னை மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். திமுக பேச்சாளர் சாதிக்கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் உள்ள குஷ்பு, கவுதமி, நமீதா, காயத்ரி ஜெயராம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுக்கு திமுக எம்பி கனிமொழி நடிகை குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். இந்நிலையில், இந்த மன்னிப்பை ஏற்காத குஷ்பு, தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து சைதை சாதிக் மீது வழக்கு பதிவு […]
Continue reading …