Home » Archives by category » அரசியல் (Page 161)

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் கிடைத்தது என்ன?

Comments Off on முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் கிடைத்தது என்ன?

அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் இன்று காலை முதல் தொடர்ந்து 8 மணி நேரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.பி.வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தொண்டர்கள் இருவரது வீடுகளுக்கு முன்னால் கூடி போராட்டம் செய்தனர். அதோடு மட்டுமல்லாமல் சோதனை செய்து பொய் வழக்கு போடுவதால் அதிமுகவை அழித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள் என எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த 8 மணி […]

Continue reading …

அமைச்சர் சுரேஷ் காதே மோடிக்கு புகழாரம்!

Comments Off on அமைச்சர் சுரேஷ் காதே மோடிக்கு புகழாரம்!

மத்திய அமைச்சர் என்று சுரேஷ் காதே பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாது என்று புகழாரம் சூட்டியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயந்த் பாட்டீல் அளித்த பேட்டியில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் கட்சி தலைவர் சரத்பவார் மற்றும் அவரது உறவினர்களை தோற்கடிக்கவே முடியாது” என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் சுரேஷ் காதே, “பிரதமர் மோடி இந்தியாவின் ஆன்மா, அவரை தோற்கடிக்க முடியாதவர்தான் சரத்பவார். முன்னாள் பிரதமர் அடல் […]

Continue reading …

இலவச மின்சாரமும் கேள்விக்குறியே?

Comments Off on இலவச மின்சாரமும் கேள்விக்குறியே?

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் 100 யூனிட் இலவச மின்சாரமும் இனி கேள்விக்குறிதான் என்று கூறியுள்ளார். மின்சார கட்டண உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. மின்சார கட்டணம் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஆர்.பி.உதயகுமார், “மின்சார கட்டண உயர்வு பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. இது மிகப்பெரிய பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் 100 யூனிட் இலவச மின்சாரமும் கேள்விக்குறி என்ற நிலை ஏற்பட்டுள்ளது. […]

Continue reading …

எடப்பாடியிடம் சாவியை ஒப்படைத்தது சரியே!

Comments Off on எடப்பாடியிடம் சாவியை ஒப்படைத்தது சரியே!

உச்சநீதிமன்றம் அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்கப்பட்டது சரிதான் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. அதிமுக அலுவலகம் கடந்த ஜூலை 11ம் தேதி சீல் வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடப்பாடி பழனிச்சாமியிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் மனுதாரர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலகத்தின் சாவியை தன்னிடம் […]

Continue reading …

அமைச்சர்களை அண்ணாமலை சாடல்!

Comments Off on அமைச்சர்களை அண்ணாமலை சாடல்!

நீட் தேர்வினால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைக்கு தூண்டுவது அமைச்சர்கள்தான் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு. மத்திய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்திருக்க வேண்டும். இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது ஆதரவாளர் அருகில் இல்லாத சூழல் நிலவி இருக்கலாம். […]

Continue reading …

சசிகலா வைத்திலிங்கம் சந்திப்பு!

Comments Off on சசிகலா வைத்திலிங்கம் சந்திப்பு!

சமீபத்தில் சசிகலாவும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் சந்தித்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இதுகுறித்த வழக்கில் தற்போது பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பாகியுள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக […]

Continue reading …

எடப்பாடி வகிப்பது தற்கால பதவியே!

Comments Off on எடப்பாடி வகிப்பது தற்கால பதவியே!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி வகிப்பது தற்காலிக பதவி மட்டுமே என்று தெரிவித்துள்ளார். நேற்று முன் தினம் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் 10 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு கட்சி மாற இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி 50 அதிமுக எம்எல்ஏக்கள் எங்களிடம் லிங்கில் உள்ளனர் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், 50 அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர்கள் ஆகியோர் எங்கள் லிங்கில் இருக்கிறார்கள் என்றும் […]

Continue reading …

பாஜக பிரமுகரின் டுவிட்டர் பதிவு!

Comments Off on பாஜக பிரமுகரின் டுவிட்டர் பதிவு!

பாஜக பிரமுகர் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரான திருச்சி சூர்ய சிவாவுக்கு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது. இந்நிலையில், பாஜக பிரமுகர் தன் டுவிட்டர் பக்கத்தில், “அரசுப்பேருந்தில், மகளிருக்கு இலவசம்ன்னு சொல்லி நீங்க பெருமைப்பட்டுக்குறீங்க. ஆனால், பயணம் செய்கின்ற மகளிர்கள் இங்கே அவமானப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதுதான் திராவிட மாடலா?” என அமைச்சர் சிவங்சங்கருக்கு டேக் செய்திருந்தார். இதையடுத்து […]

Continue reading …

மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

Comments Off on மோடிக்கு புகழாரம் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

டொனால்ட் டிரம்ப் “என்னை விட மோடியின் சிறந்த நண்பர் யாருமில்லை” என்று கூறியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021 வரை அமெரிக்காவின் 45வது அதிபராக பதவி வகித்தவர் டொனால்ட் டிரம்ப். இவர் அரசியல்வாதி மட்டுமின்றி அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபராகவும் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இவர் அமெரிக்க பிரதமராக இருக்கும்போது, கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது பிரதமர் மோடி அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து கவுரவித்தார். 2021ல் அவர் இரண்டாம் முறை […]

Continue reading …

வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

Comments Off on வானதி சீனிவாசனின் பரபரப்பு பேச்சு!

பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல், ராகுல் காந்தி நடைபயணம் சென்றாலும் எந்த பயனில்லை என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கி உள்ளார். இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று தொடங்கும் இந்த நடைபயணம் 150 நாட்கள் கழித்து காஷ்மீரில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த நடை பயணம் குறித்து வானதி சீனிவாசன் எம்எல்ஏ “இறந்து […]

Continue reading …