அச்சுந்தன்வயல் ஊராட்சி மன்ற தலைவி சசிகலா லிங்கம், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் இராமநாதபுரம், அச்சுந்தன்வயல், உத்திரகோசமங்கை பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நவாஸ் கனிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நவாஸ்கனியை ஆதரித்து ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு குடிநீர் பற்றாக்குறை ஓரளவு தீர்த்து வைக்கப்பட்டது. […]
Continue reading …*தமிழகத்தில் முதல்வர்* *மு.க.ஸ்டாலின் தலைமையிலான* *இந்தியா கூட்டணிக்கு* *பாரத முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு* திராவிட முன்னேற்றக் கழக தலைவரும்,தமிழக முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது* ; தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நல்லாட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிக்கொண்டிருகிறார். சொன்னதை செய்யும் முதல்வரான மு.க.ஸ்டாலின் 2021 ல் நடந்த சட்டமன்ற தேர்தலுக்காக அறிவித்த வாக்குறுதிகளான ….. குடும்ப […]
Continue reading …இந்தியத் தேர்தல் ஆணையம் 18வது மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “வடசென்னைக்கு 3 வது முறையாக வருகிறேன். தேர்தலுக்காக வருபவர்கள் […]
Continue reading …பாஜகவில் டிஆர் பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை இணைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார் டி.ஆர்.பாலு. இவர் திமுகவின் தலைமைக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்பட்டு வருகிறார். டி.ஆர்.பாலு தற்போது ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா ஏற்கனவே அமைச்சராகவுள்ளார். டி.ஆர்.பாலுவின் மூன்றாவது மனைவியின் மகள் மனோன்மணியை பாஜகவுக்கு இழுக்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் டி.ஆர்.பாலுவுக்கும் மனோன்மணிக்கும் […]
Continue reading …தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஆளும் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “தமிழகத்திற்கு வெள்ள நிவாரணமாக ரூ.5900 கோடி மத்திய அரசு கொடுத்துள்ளது. அதை என்ன செய்தார்கள்? என்று தமிழக அரசு கணக்கு கூற வேண்டும்” என்று பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவரது பேட்டியில், “மத்திய அரசு சென்னைக்கு 5000 கோடியை சிறப்பு நிதியாக வழங்கி உள்ளது. […]
Continue reading …காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் ஆந்திர மாநிலத்தில் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக 18வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். அதன்படி தேர்தல் […]
Continue reading …ஆம் ஆத்மி எம்பி., சஞ்சய் சிங் டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டில்லி துணைமுதலமைச்சர் மணீஸ் சிசோடியா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவும் இவ்வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். இவ்வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாத முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் […]
Continue reading …அதிமுக எம்எல்ஏ தளவாய் சுந்தரம் உள்பட 300 பேர் மீது கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதி இன்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனுமதி இன்றி கூட்டம், பிரச்சாரம் செய்பவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு […]
Continue reading …அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராமதாசுக்கு சீட் பேரம் தான் முக்கியம் என்று விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ஜெயலலிதா இல்லை என்றால் பாமக வெளியே தெரிந்திருக்காது. எங்கள் முதுகில் ஏறி சவாரி செய்தவர்கள் பாமகவினர், பாமக தொண்டர்களே அதிமுகவுடன் கூட்டணி வைக்க தான் விரும்பினார்கள். பேரம் அதிகமாகும் இடத்தில் தான் ராமதாஸ் உடன்படுவாறே தவிர கொள்கையாவது, கூட்டணியாவது, வெங்காயமாவது, எதுவுமே அவருக்கு கிடையாது. பாமகவுக்கு அங்கீகாரம் கொடுத்தது, அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியது அதிமுக தான். […]
Continue reading …