
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “திமுகவின் போலி தேர்தல் வாக்குறுதிகள் எல்லாம் வெறும் காகிதம் மட்டும்தான் என்பதை மக்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறார்கள், இனியும் திமுகவின் நாடகங்களை நம்ப மக்கள் தயாராக இல்லை” என்று தெரிவித்துள்ளார். இன்று தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக கொடுத்த 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, மேடைக்கு மேடை பொய் கூறிக் கொண்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின், அதே […]
Continue reading …
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குகள் குறைந்தால் பதில் சொல்லியாக வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார். முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சில அறிவுரைகளை கூறினார். அதில் “எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதியின் மாவட்ட செயலாளர் பதில் சொல்லியாக வேண்டும், எந்த இடத்தில் வாக்கு குறைந்தாலும் அந்த இடத்துக்கு பொறுப்பானவர் பதில் சொல்ல வேண்டியிருக்கும், எல்லா தொகுதியிலும் ஸ்டாலின் தான் வேட்பாளர் என்ற எண்ணம்தான் […]
Continue reading …
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வந்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அவர் வரும் மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர், “தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் எந்த தொகுதிகள் என்றாலும் அவர் டெபாசிட்டுக்கு போராட வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் கூட பிகாரில் சென்று போட்டியிடுவார் என்று செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது, அப்படி நடந்தால் […]
Continue reading …
மத்திய அமைச்சர் சோபா மீது தமிழர்கள் பற்றி அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழர்கள் தான் காரணம் என்று பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவரது இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதையடுத்து தனது பேச்சுக்கு […]
Continue reading …
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியவுடன் அதிமுகவுக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்பு தெரிவித்தவர். அவர் அதிமுக கூட்டணியில் இணைந்து தான் வரும் மக்களவைத் தேர்தலை சந்திப்பார் என்று கூறப்பட்டது. திடீரென மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து திமுக கூட்டணிக்கு தனது கட்சியின் ஆதரவை தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரே கட்சியான மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆதரவும் […]
Continue reading …
பிரதமர் மோடி “வரும் மக்களவை தேர்தலில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்ல வேண்டும்” என்று பேசினார். ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் வரும் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் […]
Continue reading …
ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 18வது மக்களவை தேர்தல் வரும் 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும், பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார். எனவே நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை முதல் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளுக்கும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக போவது உறுதி என்று தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் சேலம், நாமக்கல், கரூர் தொகுதிகளுக்காக, சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு அருகேயுள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை கூட்டணி கட்சித் தலைவர்கள் கைகுலுக்கி வரவேற்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “மாற்றம் வேண்டும் என நினைத்து பாஜக கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளோம். […]
Continue reading …
சமீபத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தேர்தலில் போட்டியிடுபவர்கள் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் ஒருவர் கூட விருப்பமனு கேட்டு வரவில்லை என்பதால் தேமுதிக அலுவலகமே காலியாக உள்ளது. தேமுதிக கட்சி இன்னும் எந்த கூட்டணியில் இணைவது என்ற முடிவை எடுக்க முடியாமல் உள்ளது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டுள்ளது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வரும் வியாழக்கிழமை எந்த கூட்டணியில் இணைவது குறித்து அறிவிப்பை […]
Continue reading …
பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்றுவரும் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாஜக நிர்வாகி அவரை பேச்சை நிறுத்த சொல்லிவிட்டு பாரத் மாதா கி ஜே என முழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் டிடிவி தினகரன், வாசன், ஓ பன்னீர்செல்வம், டாக்டர் ராமதாஸ், ஜான் பாண்டியன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக தலைவரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஓ.பன்னீர் செல்வம் இந்த […]
Continue reading …