Home » Archives by category » அரசியல் (Page 51)

அதிமுக தேமுதிக கூட்டணி முடிவுக்கு வருமா?

Comments Off on அதிமுக தேமுதிக கூட்டணி முடிவுக்கு வருமா?

நாளை மக்களவை தேர்தலை ஒட்டி அதிமுக தேமுதிக இடையே கூட்டணிக்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தலுக்காக தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டு, கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க, அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஏழு […]

Continue reading …

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

Comments Off on அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு!

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிவகங்கையில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சிவகங்கை அரன்மனைவாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நகர் திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகன் ஸ்டானினின் பிறந்த நாள் மற்றும் நிதி நிலை அறிக்கை விளக்க பொது கூட்டம் நகர செயலாளர் துரை ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் […]

Continue reading …

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் குறித்து விமர்சனம்

Comments Off on அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் குறித்து விமர்சனம்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் எஸ்.பி.ஐ முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது என தெரிவித்துள்ளார். தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் எஸ்.பி.ஐ 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் “எஸ்பிஐ வங்கி நினைத்தால் இந்த டேட்டாக்களை இரண்டு நிமிடங்களில் எடுத்து விடலாம், ஆனால் நான்கு மாதங்கள் காலதாமதம் கேட்டிருப்பது என்பது நிர்வாக சீர்கேடு என்று அறிய முடிகிறது, […]

Continue reading …

அமைச்சர் சேகர்பாபு மோடி குறித்து விமர்சனம்!

Comments Off on அமைச்சர் சேகர்பாபு மோடி குறித்து விமர்சனம்!

பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். புயல் வெள்ளம் ஏற்பட்டபோது திமுக உதவி கரம் நீட்டுவதற்கு பதிலாக பொதுமக்களுக்கு துயரத்தை அதிகம் தந்தது என்றும் இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி ஒருமுறை கூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார், தேர்தல் நேரத்தில் எத்தனை முறை அவர் தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக […]

Continue reading …

தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

Comments Off on தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கோரிக்கை!

பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் குறிப்பாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் பிரதமர் மோடி உடன் முதலமைச்சர்கள் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி திடீரென பிரதமரின் ஆதரவு எங்களுக்கு தேவை என்றும் மத்திய அரசுடன் நாங்கள் சமூகமாக இருக்க விரும்புகிறோம் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி நேற்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த பின் தெலுங்கானா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் அரசு நிகழ்ச்சியில் […]

Continue reading …

மனைவியை நினைத்து மேடையில் அழுத அமைச்சர்!

Comments Off on மனைவியை நினைத்து மேடையில் அழுத அமைச்சர்!

அமைச்சர் சி.வெ.கணேசன் கணவனை இழந்த தாய்மார்களுக்கு 2000 தையல் மிஷின் இயந்திரம் வழங்கினார். என்எல்சி இந்தியன் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சி எஸ் ஆர் நிறுவனம் சார்பில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கழுதூர் தனியார் பள்ளி வளாகத்தில் 2000 கணவனை இழந்த தாய்மார்களுக்கு இலவச மோட்டார் உடன் கூடிய தையல் மிஷின் இயந்திரத்தை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். விழாவில் அவர், தன் மனைவியை நினைத்து குலுங்கி குலுங்கி […]

Continue reading …

சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

Comments Off on சத்யராஜ் மகளுக்கு வலைவிரித்ததா பாஜக?

ஊட்டச்சத்து நிபுணராக இருந்து வரும் பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் “மகிழ்மதி இயக்கம்” என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இந்த இயக்கத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைந்த மாணவர்களுக்கு ஊட்டச்சத்து அளித்து வருவதாக தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு அரசியலிலும் ஆர்வம் உள்ளதாகக் கூறியுள்ள அவர் கட்சி ஒன்றில் சேரப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இதுவரை எந்த கட்சியிலும் அவர் சேரவில்லை. அவரை பாஜக தங்கள் கட்சியின் சார்பாக கொங்கு மண்டலத்தில் எதாவது ஒரு […]

Continue reading …

பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?

Comments Off on பாஜகவுக்கு பிரதமர் மோடி கொடுத்த தேர்தல் நிதி எவ்வளவு?

பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தல் நிதியாக பிரதமர் மோடி 2000 ரூபாய் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரம் நெருங்கிவிட்டால் அரசியல் கட்சிகள் நன்கொடை வசூல் செய்து அந்த பணத்தை வைத்து தான் தேர்தல் செலவு செய்கிறது. பாரதிய ஜனதா கட்சி நன்கொடையை தொடங்கியுள்ளது. அதற்காக நமோ என்ற செயலியை உருவாக்கி அதன் மூலம் நன்கொடை பெற்று வருகிறது. இந்த செயலியில் பிரதமர் மோடி முதல் நபராக 2000 ரூபாய் பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக அளித்துள்ளதாக […]

Continue reading …

ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

Comments Off on ஸ்ரீபெரும்புதூர் ராகுல் காந்தி போட்டியா?

வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் அல்லது புதுவையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையையும் தொகுதி உடன்பாடு குறித்த ஒப்பந்தத்தையும் நடத்தி வருகின்றன. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் வயநாடு […]

Continue reading …

அதிமுக கூட்டணிக்கு அழைக்கும் வைகை செல்வன்!

Comments Off on அதிமுக கூட்டணிக்கு அழைக்கும் வைகை செல்வன்!

அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாவிட்டால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுக பக்கம் வரலாம் என்று காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய வைகை செல்வன், “அதிமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுடன் நல்ல முறையில் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் நல்ல பதில் தரப்படும். தொகுதி பங்கீடுவதில் காங்கிரஸுடன் திமுகவுக்கு கசப்பு உள்ளது. காங்கிரசுக்கு போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை, பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், […]

Continue reading …