Home » Archives by category » அரசியல் (Page 53)

போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசு காரணம்: ஈபிஎஸ்

Comments Off on போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசு காரணம்: ஈபிஎஸ்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முயற்சி செய்து வருகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, தமிழகம் போதை பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாற தி.மு.க அரசே காரணம் என குற்றஞ்சாட்டினார். இதுகுறித்து அவர், “தமிழகத்தில் தான் அதிக அளவில் கஞ்சா விற்கிறது. தி.மு.கவை சேர்ந்த மாநில பொறுப்பாளர் ரூ. 2,000 கோடி […]

Continue reading …

திமுக கட்சியில் குவியும் விருப்ப விண்ணப்பங்கள்!

Comments Off on திமுக கட்சியில் குவியும் விருப்ப விண்ணப்பங்கள்!

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தற்போது அரசியல் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக குறிப்பாக அதிமுக மற்றும் திமுக அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்க வரும் கட்சியினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தங்கள் தொகுதியில் பிரபலங்கள் போட்டியிட வேண்டும் என்றும் விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வேண்டும் என்று 50 பேர்கள் வரை விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். அதேபோல் அமைச்சர் கே என் […]

Continue reading …

சசிகலா வீட்டிற்கு போன ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!

Comments Off on சசிகலா வீட்டிற்கு போன ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி!

இன்று சசிகலா வீட்டிற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி சென்று அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். சமீபத்தில் சசிகலா புதிய வீடு கட்டிய நிலையில் அந்த வீட்டிற்கு வாழ்த்து தெரிவித்து பல பிரபலங்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகலாவின் வீட்டுக்கு சென்று வீடு கோவில் போல் இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். தற்போது ஜெயலலிதாவின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் எழுத்தாளர் சிவசங்கரி இன்று சசிகலாவின் ஜெயலலிதா […]

Continue reading …

“ஜெயிலர் 2” திரைக்கதை பணியில் நெல்சன்!

Comments Off on “ஜெயிலர் 2” திரைக்கதை பணியில் நெல்சன்!

“ஜெயிலர்” திரைப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ் குமார், விநாயகன் மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் ரிலீசாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தின் விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் கலக்கி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த வெற்றி நீண்டகாலமாக தோல்விகளை கொடுத்துக் கொண்டிருந்த ரஜினிக்கு புத்துணர்ச்சியாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் “வேட்டையன்” மற்றும் லோகேஷ் இயக்கும் ரஜினி 171 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு […]

Continue reading …

செல்லூர் ராஜூவின் கேள்வி!

Comments Off on செல்லூர் ராஜூவின் கேள்வி!

செல்லூர் ராஜு நேற்று பிரதமர் மோடி நெல்லையில் பேசிய போது எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை மட்டும் புகழ்ந்த நிலையில் எடப்பாடியாரை ஏன் புகழவில்லை என கேள்வி எழுப்பி உள்ளார். இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வந்த போது பல்லடம், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று நெல்லையில் பிரதமர் மோடி பேசிய போது அதிமுக என்ற கட்சியை ஆரம்பித்த […]

Continue reading …

பரந்தூர் விமான நிலைய அறிவிப்பால், திமுகவுக்கு பின்னடைவா?

Comments Off on பரந்தூர் விமான நிலைய அறிவிப்பால், திமுகவுக்கு பின்னடைவா?

பரந்தூர் பகுதி விவசாய பெருமக்கள் ஓராண்டுக்கும் மேலாக பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் எடுப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து அது குறித்து அரசு ஆணையும் வெளியிட்டுள்ளது. இது திமுகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்கள் மற்றும் அதன் விளைநிலங்களையும் சேர்த்து சுமார் 4,563 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவெடுத்திருக்கிறது. சமீபத்தில் […]

Continue reading …

ஆரணியில் களமிறங்கும் மன்சூர் அலிகான்!

Comments Off on ஆரணியில் களமிறங்கும் மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியதோடு மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் போட்டியிடப் போகும் தொகுதி குறித்தும் அறிவித்துள்ளார். விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய, மாநில கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பலரும் புதிய கட்சிகளும் தொடங்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக நாம் தமிழர் கட்சியில் வேட்பாளராக அரசியலில் களம் கண்ட நடிகர் மன்சூர் அலிகான் தற்போது தனியாக இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை தொடங்கியுள்ளதோடு, நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்திருந்தார். தற்போது […]

Continue reading …

தங்கம் தென்னரசு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

Comments Off on தங்கம் தென்னரசு மீது இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

நேற்று அமைச்சர் ஐ பெரியசாமி குறித்த வழக்கின் தீர்ப்பு அதிரடியாக வெளியானது. அடுத்த கட்டமாக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது அமைச்சர் தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே தனது வாதத்தை முன்வைத்துவிட்டார். இன்று இவ்வழக்கில் அரசு தரப்பு வாதம் தொடர உள்ளதாகவும் […]

Continue reading …

தமிழகத்தில் பாஜக 2வது பெரிய கட்சியா?

Comments Off on தமிழகத்தில் பாஜக 2வது பெரிய கட்சியா?

ஊடகங்கள் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரமாக இருப்பது குறித்து கருத்துக்கணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக தான் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தை பிடிப்பது யார் என்பதில் தான் தற்போது பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த கால ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகள் தான் மாறி மாறி முதல் இரண்டு இடங்களை பிடித்து வந்தது. தற்போது இரண்டாவது இடத்தை அதிமுக பறி கொடுக்கும் என்ற […]

Continue reading …

மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

Comments Off on மீண்டும் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனு மீதான விசாரணை கடந்த 21-ம் தேதி நீதிபதி என்.ஆனந்த் […]

Continue reading …