Home » Archives by category » அரசியல் (Page 6)

பஞ்சாப் முதல்வர் ஆவேசம்!

Comments Off on பஞ்சாப் முதல்வர் ஆவேசம்!

பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் உடல் எடை அதிகமானதை அவரது பயிற்சியாளர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் பயிற்சி கொடுக்க சென்றார்களா? அல்லது விடுமுறைக்கு சென்றார்களா? என ஆவேசமாக கூறியுள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்தின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இந்த தவறு உயர்மட்ட அளவில் நடந்துள்ளது. பயிற்சியாளர்கள் லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் நிலையில் அவர்கள் உடல் எடையை முதலில் கவனிக்க […]

Continue reading …

வினேஷ் போகத்துக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்!

Comments Off on வினேஷ் போகத்துக்கு புகழாரம் சூட்டிய ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வினேஷ், நீங்கள் ‘ஒவ்வொரு வகையிலும்’ உண்மையான சாம்பியன் என்று புகழாரம் சூட்டியுள்ளார். வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆனால் அவர் தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்ற 140 கோடி மக்களின் கனவு 100 கிராம் எடையில் தகர்ந்து போனது. வினேஷ் போகத்திற்கு இந்தியா முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் […]

Continue reading …

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் உதயநிதி!

Comments Off on லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் உதயநிதி!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் சக்தி வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசாக உருவாகி வருகிறார். தற்போது தமிழகத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகி, விநியோகஸ்தர் மற்றும் நடிகர் என பரிணமித்துள்ளார். இவரை கட்சியில் இருக்கும் மூத்த தலைவர்களை விட அதிகமாக அனைத்திற்கும் முன்னிறுத்தி கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஸ்டாலினுக்குப் பிறகு திமுக தலைவர் அவர்தான் என்றும் முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான் என்றும் கருத்துகள் எழ ஆரம்பித்துள்ளன. தான் படித்த லயோலா கல்லூரியின் […]

Continue reading …

தமிழக காங்கிரஸ் மீது டில்லியில் புகாரளித்த திமுக?

Comments Off on தமிழக காங்கிரஸ் மீது டில்லியில் புகாரளித்த திமுக?

கடந்த சில வாரங்களாக தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் கூட்டணி கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. திமுக சீனியர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்த போது இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனியர் அமைச்சர்கள், திமுகவுக்கு எதிராக பேசும் காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டு வெற்றி பெற்ற பிறகு நம்மை மதிப்பதே இல்லை என்று தலைமையிடம் புகார் கூறியதாக தெரிகிறது. இதை […]

Continue reading …

குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு!

Comments Off on குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் அறிவிப்பு!

தமிழக அரசு பருப்பு, மற்றும் பாமாயில் ஜூலை மாதத்தில் வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு அரசு சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ. 30-க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூ.25-க்கும் மானிய விலையில் வழங்கி […]

Continue reading …

ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

Comments Off on ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதிலடி!

மத்திய அமைச்சர் கிரி ராஜ் சிங் தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ராகுல் காந்தி தவறான தகவல்களை பரப்புவதாக அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி நாடாளுமன்ற கூட்டத்தில் நான் பேசிய போது “இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை, இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த […]

Continue reading …

வடிவேலுவின் மீம்ஸை பதிவு செய்த அண்ணாமலை?

Comments Off on வடிவேலுவின் மீம்ஸை பதிவு செய்த அண்ணாமலை?

6 மாதத்தில் ரூபாய் 6.5 கோடியில் கொள்ளிடம் ஆற்றின் இடையில் கட்டப்பட்ட தடுப்பணை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற மீம்ஸை வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை ஆறு மாதத்தில் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி அருகே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் மண்ணரிப்பால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய […]

Continue reading …

மக்களவையில் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து விளக்கம்!

Comments Off on மக்களவையில் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் குறித்து விளக்கம்!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்தார். மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் ‘எய்ம்ஸ்’ (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், தற்போது 2024 மக்கவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் […]

Continue reading …

உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!

Comments Off on உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மலைச்சாமி இலங்கை கடற்படையினரின் ரோந்துப்படகு மோதியதில் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், “இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூக்கையா (வயது 54), முத்துமுனியாண்டி (வயது 57), மலைச்சாமி (வயது 59) மற்றும் இராமச்சந்திரன் (வயது 64) ஆகிய நால்வரும் இன்று அதிகாலை இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து விசைப்படகில் சென்று நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்குவந்த இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப்படகு […]

Continue reading …

வெளியுறவு அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Comments Off on வெளியுறவு அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

தமிழக மீனவர் ஒருவர் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்ற படகு மீது இலங்கை கடற்படையின் கப்பல் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இலங்கை கடற்படையால் ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நேற்று 359 மீன்பிடிக் கப்பல்கள் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குள் சென்றன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் […]

Continue reading …