Home » Archives by category » அரசியல் (Page 61)

செந்தில் பாலாஜி மனு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு!

Comments Off on செந்தில் பாலாஜி மனு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் […]

Continue reading …

கூட்டணிக்கு நிபந்தனை விதித்த பிரேமலதா!

Comments Off on கூட்டணிக்கு நிபந்தனை விதித்த பிரேமலதா!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டச் செயலாளருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம், “தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். 2014 […]

Continue reading …

விஜய்யிடம் தொலைபேசியில் என்ன பேசினார் ரஜினி?

Comments Off on விஜய்யிடம் தொலைபேசியில் என்ன பேசினார் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கட்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் கட்சிக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் […]

Continue reading …

புதிய தேர்தல் ஆணையர் யார்?

Comments Off on புதிய தேர்தல் ஆணையர் யார்?

பிரதமர் மோடி தலைமையிலான குழுவின் கூட்டம் இன்று புதிய தேர்தல் ஆணையர் யார்? என்பது குறித்து முடிவு செய்ய இன்று டில்லியில் கூடியது. இன்று பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய கூடுகிறது. பிரதமர் மோடி பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி முதல் […]

Continue reading …

முதலமைச்ரை சந்திக்கிறாரா கமல்?

Comments Off on முதலமைச்ரை சந்திக்கிறாரா கமல்?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும், முதலமைச்சரை சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 12ம் தேதி சென்னை திரும்பும் கமல்ஹாசன் அடுத்த நாளே முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாத நிலையில், 12ம் தேதிக்கு […]

Continue reading …

திமுக எம்எல்ஏ மகன் விவகாரம்; மகளிர் ஆணைய தலைவர் விசாரணை!

Comments Off on திமுக எம்எல்ஏ மகன் விவகாரம்; மகளிர் ஆணைய தலைவர் விசாரணை!

மாநில மகளிர் ஆணையம் சென்னையில் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கருணாநிதி மகன் ஆண்டோ வீட்டில், 18 வயது இளம் பெண் ஒருவர், பணிபுரிந்து வந்தார். அப்பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்ததாகவும், அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. […]

Continue reading …

ஸ்பெயின் வெற்றி பயணம் குறித்து முதலமைச்சர் கடிதம்!

Comments Off on ஸ்பெயின் வெற்றி பயணம் குறித்து முதலமைச்சர் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் வென்றது போல தேர்தல் களத்தில் இந்தியாவின் வெற்றியும் அமையும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றிருந்தார். இன்று தமிழகம் திரும்பிய அவர் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஸ்பெயின் பயணம் வெற்றி பெற்றது போல இந்தியாவின் வெற்றி அமையும். மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்து, தேர்தல் லாபம் தேடும் அரசியல் ஸ்பெயினில் இல்லை. வேற்று மத மன்னர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை ஆட்சியாளர்கள் இடித்து தகர்க்கவில்லை. […]

Continue reading …

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

Comments Off on மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

வருகிற தேர்தலில் திமுகவின் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய […]

Continue reading …

மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

Comments Off on மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

உத்தவ் தாக்கரே இதுவரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசியிருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதிஷ்குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே “நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார். மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட […]

Continue reading …

நேரு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி! கே.எஸ் அழகிரி கண்டனம்!

Comments Off on நேரு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி! கே.எஸ் அழகிரி கண்டனம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ் அழகிரி நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, […]

Continue reading …