
பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி பெண்ணை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவரது முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா ஆகியோர் ஆண்டாள் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது சகோதரியையும் தாக்கியதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக இருக்கும் நிலையில் […]
Continue reading …
தனது அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோட்டை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு என போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் […]
Continue reading …
சமீபத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர் “மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிகிகி நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் […]
Continue reading …
இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது எனது முதல் உரை. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு பயனாளியும் விட்டுவிடாமல் அரசின் பயங்கள் சென்றடைய வேண்டும் என்பதை எனது அரசின் இலக்கு ஆகும். […]
Continue reading …
பாமக மற்றும் தேமுதிகவிடம் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தையை […]
Continue reading …
துரை வைகோ மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், 6 தொகுதிகளில் பூத் அமைத்து பணிகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ், திமுக, திரிணாமுல், காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்துள்ளன. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், தங்கள் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அனைத்து கட்சிகளும் தயார்படுத்தி, தொகுதி பங்கீடுகள் பற்றி கூட்டணி கட்சிகளும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மதிமுக […]
Continue reading …
நாடு முழுதும் மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ளதால், எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருவதுடன் கட்சி நிர்வாகிகளை, தொண்டர்களை தயார்படுத்தி வருகின்றன. பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, தொகுதிப்பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி இன்று 16 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான 16 பேர் அடங்கிய முதற்கட்ட […]
Continue reading …
கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்டதக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 18ம் தேதி […]
Continue reading …
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து ஜாமீனுக்கு விண்ணப்பித்து வருகிறார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக அவரது உடல்நலத்தை சுட்டிக்காட்டி […]
Continue reading …
பாஜக மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த […]
Continue reading …