
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக இணையதளம் மற்றும் ஈமெயில் முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஏற்க மாட்டோம். சட்டப்பேரவை பாதியில் கலைக்கப்பட்டால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். நாட்டின் […]
Continue reading …
பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் கடைகளுக்கு எந்த டார்க்கெட்டையும் வைக்கவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். கோவையில் ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம், “புயலின் காரணமாக காஞ்சிபுரம், சென்னை தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை அதிகளவில் பெய்த போது முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மிக வேகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பான சூழ்நிலை கொண்டுவரப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள் சாக்கடையில் அடைத்திருந்த காரணத்தினால் தான் மழை நீர் சாலையில் தேங்கியுள்ளது. முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ஏழு லட்சம் கோடி […]
Continue reading …
பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனவரி 22ம் தேதி நடைபெறவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மது விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 22ம் தேதியன்று அயோத்தியில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் செய்து திறக்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. ராமர் கோவில் திறக்கப்படுவதையொட்டி உத்தர பிரதேசத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக முதலமைச்சர் யோகி […]
Continue reading …
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். தற்போது அவருடைய பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செயல் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என்று மாற்றப்பட்டதோடு அதுமட்டுமின்றி தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதாவின் இச்செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். […]
Continue reading …
விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கான பதிலை அவரே கூறியுள்ளார். உதயநிதி துணை முதலமைச்சராகப் போகிறார் என்ற செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியிருக்கிறது. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுக இளைஞரணி செயலாளராக களம் இறங்கிய உதயநிதிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றபோதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் […]
Continue reading …
15வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலம் […]
Continue reading …
ஆளுநர் சேலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆளுநர் ஆர்.என் ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். துணை வேந்தர் ஜெகநாதனக்கு ஆளுநர் ஆதரவு தருவதை கண்டித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக ஆளுநரை கண்டித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன […]
Continue reading …
தமிழ்நாடு அரசு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை செய்கிறது என்று செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி என்றும் பழைய தகரத்திற்கு பாலிஷ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தமிழக அரசை […]
Continue reading …
கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று பெயர் மாற்றாததால் மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தேசிய சுகாதார இயக்கம் (National Health Misson) திட்டத்தின் மருத்துவ மையங்களை ஆயுஸ்மான் […]
Continue reading …
மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவஹருல்லா சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்து ஈபிஎஸ் கூறுவதை நம்ப மாட்டோம் என பேசியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பயணித்தால் நாடாளுமன்றம் செல்லலாம் என சிலர் தப்பு கணக்கு போட்டு வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி சிறுபான்மை மக்களின் நலன்களை பற்றி கூறும் வார்த்தைகளில் உண்மை துளியும் இருந்ததில்லை. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றியை […]
Continue reading …