Home » Archives by category » அரசியல் (Page 76)

சோனியா காந்தி ஆதங்கம்!

Comments Off on சோனியா காந்தி ஆதங்கம்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மத்திய பாஜக அரசால் ஜனநாயகத்தின் குரல்வலை நெரிக்கப்பட்டு விட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக விளக்கமளிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் அமலில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவைச் சேர்ந்த 141 எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிரடியாக -சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய வரலாற்றில் 141 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல்முறை. எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் […]

Continue reading …

அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நிலை பாதிப்பு!

Comments Off on அமைச்சர் துரைமுருகனுக்கு உடல்நிலை பாதிப்பு!

திடீரென உடல்நல குறைவால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாக அமைச்சர் துரைமுருகனுக்கு சளி, இருமல் தொல்லை இருந்ததாகவும் இதையடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் துறைமுகத்திற்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் வழங்கி வருகிறார்கள். அவரது உடல்நலம் குறித்து அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இன்று அல்லது நாளை […]

Continue reading …

தமிழ்நாடு அரசு குறித்து ஈபிஎஸ் குற்றச்சாட்டு

Comments Off on தமிழ்நாடு அரசு குறித்து ஈபிஎஸ் குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு மத்திய அரசிடம் விளம்பரத்திற்காக நிவாரண தொகை கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி “வெள்ளத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வேளாண் வருவாய்த்துறை அதிகாரிகளை வைத்து முறையாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 25000 ரூபாய் இழப்பீடு தரவேண்டும். சேதங்களை மதிப்பீடு செய்யாமல் நிவாரண தொகைகயை திமுக அரசு கேட்டுள்ளது. சேதத்தை கணக்கிடாமல் நாடாளுமன்றத்தில் 6000 கோடி ரூபாய் டி.ஆர்.பாலு […]

Continue reading …

யாத்திரையை ஒத்தி வைத்த அண்ணாமலை!

Comments Off on யாத்திரையை ஒத்தி வைத்த அண்ணாமலை!

கடந்த சில மாதங்களாக என் மண் என் மக்கள் என்ற யாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்தி வந்தார். தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக யாத்திரையை ஒத்திவைத்துள்ளார். இதுகுறித்து அவர், “கனமழை காரணமாக தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பா.ஜனதா தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம். பொதுமக்களுடன் தோளோடு தோளாக நின்று, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் களத்தில் நிவாரணப்பணிகளில் […]

Continue reading …

ராமர் கோவில் அறக்கட்டளையின் அறிவிப்பு!

Comments Off on ராமர் கோவில் அறக்கட்டளையின் அறிவிப்பு!
ராமர் கோவில் அறக்கட்டளையின் அறிவிப்பு!

ராமர் கோவில் அறக்கட்டளை ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி மற்றும் ஜோஷி வர வேண்டாம் என்று தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 4000 சாமியார்கள் 2200 சிறப்பு விருந்தினர்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். அத்வானிக்கு 96 வயது ஆவதாலும், ஜோஷிக்கு 90 வயது ஆவதால் இருவரும் வயதை கணக்கில் கொண்டு ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வர வேண்டாம் என அறக்கட்டளை பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். […]

Continue reading …

காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

Comments Off on காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? காயத்ரி ரகுராம்!

நடிகையும் பாஜக எதிர்பாளருமான காயத்ரி ரகுராம் தமிழகம் தத்தளிக்கும் நேரத்தில் காசியில் தமிழ்ச்சங்கம் தேவையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “காசி தமிழ்ச் சங்கத் திட்டத்திற்கும், பொதுக்கூட்டத்துக்கும் எத்தனை கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது, இப்போது தமிழ்நாடு தென்பகுதி கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் நிவாரண நிதிக்கு 5060 கோடி கேட்டும், மத்திய அரசு ஆதரிக்கவில்லை. இப்போது தூத்துக்குடி, திருச்செந்தூர், திருநெல்வேலியில் இவ்வளவு சேதம், மத்திய அரசு ஆதரிக்குமா? உ.பி.க்கான 19000 கோடி திட்டத்தை பிரதமர் மோடி ஊக்குவித்து […]

Continue reading …

ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

Comments Off on ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

இன்று ஒரே நாளில் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் சமீபத்தில் இருவர் புகுந்து கண்ணீர் புகைக்குண்டு வீசினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் […]

Continue reading …

சிறப்பு குழு பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

Comments Off on சிறப்பு குழு பற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!

இன்று தென்மாவட்டங்களில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, “மின்தடை சம்பந்தமான புகார்களை 24ஙீ7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்து வரும் […]

Continue reading …

முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

Comments Off on முதலமைச்சர் ஸ்டாலின் டில்லி புறப்பாடு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் […]

Continue reading …

காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா?

Comments Off on காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைகிறாரா?

காங்கிரஸ் கட்சியில் பாஜக முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நடிகை காயத்ரி ரகுராம் முன்னதாக பாஜக கட்சியில் இருந்தபோது அவருக்கும், சில பாஜக முக்கிய புள்ளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இவ்விவகாரத்தில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சமீப காலங்களில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வந்தார். அவர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் பேசி […]

Continue reading …