Home » Archives by category » அரசியல் (Page 78)

அதிமுக – காங்கிரஸ் கூட்டணியா?

Comments Off on அதிமுக – காங்கிரஸ் கூட்டணியா?

காங்கிரஸ் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு உதயநிதி சனாதனம் குறித்து பேசியதே காரணம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து […]

Continue reading …

மதுரை ஐகோர்ட் கண்டிப்பு!

Comments Off on மதுரை ஐகோர்ட் கண்டிப்பு!

மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சென்னையை போன்று மதுரையை மாற்றி விடாதீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை ஐகோர்ட் கிளை, “சட்ட விரோதமாக கட்டுமானம் கட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது, முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது. அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது. மதுரை […]

Continue reading …

வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

Comments Off on வெள்ள பாதிப்பு குறித்து மத்திய குழு தகவல்!

மத்திய குழு வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழகத்திற்கு தெரிவித்துள்ளது. மத்திய குழு சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் சேதம் குறித்து கணக்கிட சென்னைக்கு வருகை தந்தது. பின்னர் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நாங்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம். பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள […]

Continue reading …

மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா?

Comments Off on மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியா?

மதிமுகவுக்கு வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் இரண்டு தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒரு தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலில் உடையாமல் அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மதிமுகவும், திமுக கூட்டணியில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சிக்கு திமுக ஒன்று அல்லது இரண்டு தொகுதிகள் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மதிமுகவின் நிர்வாக குழு கூட்டத்தில் பேசியபின் வைகோ செய்தியாளர்களிடம், “மதிமுகவின் முதன்மை செயலர் துரை […]

Continue reading …

பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

Comments Off on பிரதமர் குறித்து புதினின் பேட்டி!

ரஷ்யா அதிபர் புதின் இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு குறித்து மாஸ்கோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்கு அவர் பதிலளித்தபோது “இந்தியாவின் நலன் இந்திய மக்களை நலம் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி யாரும் பணிய வைக்க முடியாது. அவர் யாருக்கும் பயப்பட மாட்டார். மோடியை அச்சுறுத்த […]

Continue reading …

எண்ணெய் கழிவு விவகாரம்: விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம்!

Comments Off on எண்ணெய் கழிவு விவகாரம்: விசாரணை செய்த பசுமை தீர்ப்பாயம்!

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் சென்னை மட்டுமல்லாது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதில் சென்னை, எர்ணாவூர் பகுதியில் மழைநீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இதுகுறித்து பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் குழு அமைத்து திங்கள் கிழமை களத்தில் ஆய்வு செய்து செவ்வாய்க்கிழமை அறிக்கையை தாக்கல் செய்ய மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வரும் ஆய்வு அறிக்கையை வரும் […]

Continue reading …

கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்!

Comments Off on கால்வாயில் கொட்டப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டுகள்!

ஆயிரக்கணக்கான பால்பாக்கெட்டுகள் தாம்பரம் அருகில் உள்ள கால்வாயில் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். குறிப்பாக திங்கள் செவ்வாய் புதன் ஆகிய மூன்று நாட்கள் பல பகுதிகளுக்கு பால் சென்று சேரவில்லை. தற்போது தான் நிலைமை ஓரளவு சீராகி வருகிறது. ஒரு பாக்கெட் பாலுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தத்தளித்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆவின் பால் பாக்கெட்டுகள் தாம்பரம் கால்வாயில் கொட்டப்பட்டிருப்பதை பார்த்து […]

Continue reading …

அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

Comments Off on அண்ணாமலையின் குற்றச்சாட்டு!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக மாநில நந்தினி நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கடினமாக உழைக்கும் தமிழக விவசாயிகளை வஞ்சிப்பதை, திமுக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இப்போது ஒரு படி மேலாக, ஆவின் நிறுவனம், தமிழகத்தின் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், சுமார் இரண்டரை லட்சம் லிட்டர் அளவுக்கு, கர்நாடக […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன், அதேபோல் அனைத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவில் டிசம்பர் 2 முதல் 4 வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது பெருமழை. இந்த இயற்கை பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பேரிடர் […]

Continue reading …

சென்னை வெள்ளம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

Comments Off on சென்னை வெள்ளம் குறித்து கமல்ஹாசன் கருத்து!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் சென்னை வெள்ளம் குறித்து அரசை குறை கூறுவதைவிட இறங்கி வேலை செய்வதே முக்கியம் என்று கருத்து தெரிவித்துள்ளார். சென்னையின் பல பகுதிகளில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் வடியாத நிலையில் நிவாரண பொருட்கள் பாடல்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு அளிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் சரியான ஏற்பாடுகள் […]

Continue reading …