Home » Archives by category » அரசியல் (Page 79)

டிவிஎஸ் நிறுவனத்தின் நிதியுதவி!

Comments Off on டிவிஎஸ் நிறுவனத்தின் நிதியுதவி!

டிவிஎஸ் நிறுவனம் மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்கான முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. அத்துடன், மிக்ஜாம் புயல் தீவிரத்தால் சென்னையில் ஒட்டுமொத்த பகுதிகளும் பாதிக்கப்படுள்ளன. சென்னை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்புப் படையினர், போலீசார், தன்னார்வலர்கள் மீட்டனர். தற்போது சென்னை வெள்ள பாதிப்பில் இருந்து, இயல்புக்கு திரும்பி வருகிறது. முதலமைச்சரின் பொது நிவாராண நிதிக்கு உதவி செய்ய விரும்புவோர் […]

Continue reading …

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவிநீக்கம்!

Comments Off on திரிணாமுல் காங்கிரஸ் எம்பி பதவிநீக்கம்!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹுவா மொய்த்ரா பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டதால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நிர்வாக பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பரிந்துரை அறிக்கை மீது வாக்கெடுப்பு […]

Continue reading …

செல்வப்பெருந்தகையின் கோரிக்கை!

Comments Off on செல்வப்பெருந்தகையின் கோரிக்கை!

ஸ்ரீவில்லிப்புத்தூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை சென்னை மட்டுமல்லாது வெள்ளப்பெருக்கால் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்காள் தங்களது ஒருமாத ஊதியத்தை சிறுபங்களிப்பாக முதலமைச்சரின் பொது நிவாரணநிதிக்கு அளிக்கின்றோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “சென்னையில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத மழை, வெள்ளப் செங்கல்பட்டு காஞ்சிபுரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளால் சென்னை, திருவள்ளுர், மாவட்டங்கள் மிகக்கடுமையாகப் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், […]

Continue reading …

சிறப்பு மருத்துவ முகாம்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on சிறப்பு மருத்துவ முகாம்கள்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிக்ஜாம் புயலின் காரணமாக கனமழை பெய்த பகுதிகளில் பொதுமக்களின் உடல்நலனை காக்கின்ற வகையில், முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார். சென்னை முழுவதுமாக மிக்ஜாம் புயலால் பாதிப்படைந்துள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் நிலையில் அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமாத்துறையினர் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு உதவி […]

Continue reading …

சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: ஆளுநர் அனுமதி!

Comments Off on சிறைக்கைதிகள் விடுதலை விவகாரம்: ஆளுநர் அனுமதி!

ஆளுநர் சிறைக்கைதிகள் விவகாரத்தில் 31 கோப்புகளுக்கு அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் 71 கோப்புகளில் 31 கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு விடுதலை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் 39 கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவர், உறுப்பினர்களின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான கோப்புகள் அனைத்தையும் ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது வழக்கு பதிவு […]

Continue reading …

குடிமகன் செய்த அலப்பறைகள்!

Comments Off on குடிமகன் செய்த அலப்பறைகள்!

நாளை கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் நடைபெற உள்ள கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி நுழைவாயிலில் அரசியல் பிரமுகர்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சிவகங்கை அருகே உள்ள பில்லூரை சேர்ந்த பாக்கியராஜ் மது போதையில் கல்லை தூக்கி எரிந்து பிளக்ஸ் பேனரை கிழித்தார். மேலும் அதனை அகற்ற முயன்ற போது பின்புறமாக கீழே விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு சுயநினைவினை இழந்து கீழே விழுந்து […]

Continue reading …

ஆளுநர் மத்திய அரசின் Nominee?

Comments Off on ஆளுநர் மத்திய அரசின் Nominee?

தமிழக ஆளுனர் ரவிக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இது குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக ஆளுனருக்கு எதிராக மனு தாக்கலுக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தது. ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் தொடங்கியது. அப்போது, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது ஏன்? என்று […]

Continue reading …

பெட்ரோல் குண்டு விவகாரம் ஆவணங்களை என்ஐஏ-விடம் ஒப்படைக்க உத்தரவு!

Comments Off on பெட்ரோல் குண்டு விவகாரம் ஆவணங்களை என்ஐஏ-விடம் ஒப்படைக்க உத்தரவு!

ஆளுநர் மாளிகை முன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்த வழக்கை என்.ஐ.ஏ முன்வந்து எடுத்தது. காவல்துறை ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவு ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் உள்ள ஆவணங்களை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து கிண்டி போலீசார் வழக்கு ஆவணங்களை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் கிண்டி […]

Continue reading …

அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியேறிய பொன்முடி!

Comments Off on அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியேறிய பொன்முடி!

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணையில் நவம்பர் 30ம் தேதி ஆஜராக வேண்டுமென அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. 5 மணி நேர […]

Continue reading …

மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

Comments Off on மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் நிதியுதவி!

முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இச்சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, 4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் […]

Continue reading …