Home » Archives by category » அரசியல் (Page 80)

பள்ளியில் காலை உணவு திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பு!

Comments Off on பள்ளியில் காலை உணவு திட்டம் தனியாரிடம் ஒப்படைப்பு!

பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சமீபத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது அத்திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான வரவு, செலவுகள் ஏனைய நிர்வாகங்கள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இன்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், சென்னை […]

Continue reading …

4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Comments Off on 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் இருந்து பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை காணொலி வாயிலாக திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் உரையாற்றிய போது, “முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழகம் உள்ளது. வளர்ச்சித் திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் உறுதியாக இருக்கிறோம். முதல்கட்டமாக ரூ.400 கோடி முதலீட்டில் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 2028ம் ஆண்டிற்குள் ரூ.2440 கோடி முதலீட்டில் 29,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் குறித்து நீதிபதி விளக்கம்

Comments Off on செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் குறித்து நீதிபதி விளக்கம்

சமீபத்தில் உயர் நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றத்திலும் ஜாமீன் மறுக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்க என்ன காரணம் என்பது குறித்து நீதிபதி விளக்கமளித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு மூளையில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாகவும் எனவே அவரது சிகிச்சைக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது ஆனால் இது குறித்து […]

Continue reading …

மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு விமர்சனம்

Comments Off on மன்னிப்பு கேட்க முடியாது… குஷ்பு விமர்சனம்

நடிகை குஷ்பு “நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது, தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ்” என்று விமர்சனம் செய்தார். காங்கிரஸ் கட்சி நடிகை குஷ்பு சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இன்று குஷ்பு செய்தியாளர்களிடம், “நான் தவறு செய்யவில்லை அதனால் மன்னிப்பு […]

Continue reading …

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை?

Comments Off on செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை?

இன்று உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வெளியானது. உச்ச நீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து செந்தில் பாலாஜி இன்னும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை திரும்ப பெற உச்சநீதிமன்றம் […]

Continue reading …

பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

Comments Off on பகீர் தகவலளிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

சுப்பிரமணியன் சாமி பிரதமர் மோடி சமீபத்தில் தேஜஸ் விமானத்தில் பறந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது போலி என தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் பெங்களூரை தளமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்த ஆய்வு செய்தார். அதன்பின் மணிக்கு 1975 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட தேஜஸ் போர் விமானத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். இவ்விமானத்தில் வாஜ்பாயை அடுத்து மோடி தான் பயணம் செய்தார். இந்நிலையில் இது […]

Continue reading …

பழனிச்சாமிக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு!

Comments Off on பழனிச்சாமிக்கு பேனர் வைக்க அனுமதி மறுப்பு!

தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் மாநாடு நடைபெறுகிறது. இதில் அதிமுகவின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து சிறப்பு அழைப்பாளராக கொள்கிறார். கிருத்துவ கூட்டமைப்பு மற்றும் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அவிநாசி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பதாகைகளை போலீசார் அகற்றுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த கிறிஸ்தவர்கள் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் திரண்டு, பேனர்களை […]

Continue reading …

மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல; அமைச்சர் மனோ தங்கராஜ்!

Comments Off on மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல; அமைச்சர் மனோ தங்கராஜ்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமைச்சர் மனோ தங்கராஜ் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். அதற்கு “மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கார் பரம்பரை அல்ல! பெரியாரின் பேரன்கள்” என அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், “ரபேல் வாட்சு கட்டி ஆடுமேய்ப்பவரின் கதையை தான் கூறினேன். தம்பி அண்ணாமலை அவசரப்பட்டு முன்வந்து, நான் தான் அந்த #வடநாட்டுகைக்கூலி_அண்ணாமலை என்று கூறுவது ஏனோ? குற்றமுள்ள நெஞ்சம் […]

Continue reading …

டிஜிபி மீதான வழக்கிற்கு அதிமுக கண்டனம்!

Comments Off on டிஜிபி மீதான வழக்கிற்கு அதிமுக கண்டனம்!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.நடராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு) மீது, முதலமைச்சர் உத்தரவுப்படி பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பது, இந்த விடியா திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், சகிப்புத்தன்மையற்ற மனநிலையையுமே எடுத்துக்காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக போலி செய்தியை வாட்ஸ் ஆப் குழுக்களில் பரப்பிய முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ் மீது 7 பிரிவுகளின் கீழ் […]

Continue reading …

தேர்தலில் போட்டியிடுவேன்; குஷ்பு!

Comments Off on தேர்தலில் போட்டியிடுவேன்; குஷ்பு!

எக்ஸ் பக்கத்தில் பிரபல நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவுக்கு இணையவாசி ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த குஷ்பு “திமுக இப்படித்தான் தவறான மொழியைப் பயன்படுத்துகிறது. இதுதான் அவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. ஒரு பெண்ணை அவமதிக்கவும், மன்னிக்கவும் உங்களது சேரி மொழியில் பேச முடியாது. சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள். அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன்” என்று விளக்கமளித்தார். இன்று சென்னை விமான நிலையம் வந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் […]

Continue reading …