
தமிழக கவர்னர் ரவி இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஒரு ஆவணம், இது குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இன்று ஆளுநர் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர், “இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது நோக்கம் நிறைவேற உள்ளதா? என்பது […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பால்வளத்துறை இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணாமலை, “ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. தமிழ்நாடு அரசியலில் […]
Continue reading …
ஆந்திர மாநில அமைச்சர் டிசம்பர் மாதம் முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடு முழுதும் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் இதை வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்த கட்டமாக படிப்படியாக அனைத்து மாநிலங்களிலும் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசை […]
Continue reading …
கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய பழங்குடியினர் இளைஞர் விழாவில் கலந்து கொண்டபோது தமிழ்நாட்டின் பெருமை குறித்து பிற மாநில பழங்குடி மக்களிடையே பேசியுள்ளார். சென்னையில் அடையாரில் உள்ள இளையோர் விடுதியில் நேரு யுவகேந்திராவின் 15வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் வருகை புரிந்துள்ளனர். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது […]
Continue reading …
அமைச்சர் மா சுப்பிரமணியன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் மார்பு சளி மற்றும் இடைவிடாத இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்தாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “விஜயகாந்த் உடல் உபாதைகள் காரணமாக அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது படிப்படியாக தேறி வருகிறது. இருப்பினும் […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 10 முறை அவரது காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் […]
Continue reading …
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என கூறியிருந்தார். “திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று” என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானிதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு…. விழுப்புரம் மாவட்டம் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அறிக்கையில், “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, […]
Continue reading …
தலைமை செயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததால் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனே கூட்டி, அந்த சட்ட முன்வடிவுகளை மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ளது ஜனநாயக பாதையில் மாபெரும் மைல்கல் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் இன்று பங்கேற்றோம். நியமனப்பதவியில் அமரும் பாசிசத்தின் நிழலிடம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் அரசு ஒரு போதும் பின் வாங்காது என்பதற்கு உதாரணமே இந்த சிறப்புக்கூட்டம். சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட முன்வடிவுகளை அரசியலமைப்பின் மாண்புக்கு […]
Continue reading …