
சசிகலா இன்றைய திமுக ஆட்சியில் காசு இருந்தால்தான் கடவுளையே பார்க்கமுடியும் என்ற அவல நிலை இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தான் திமுக தலைமையிலான ஆட்சியின் லட்சணம் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் தற்போது கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் நடைபெறுவதால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்றைக்கு நடப்பதையெல்லாம் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுனர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும், இருக்கும் வரை மக்களாட்சி தத்துவத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கவர்னர் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. 10 மசோதாக்களை திடீரென கவர்னர் ரவி திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை சிறப்பு சட்டமன்றம் கூடி, கவர்னர் திருப்பி அனுப்பிய 10 சட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழாவிற்கு நேரில் வந்து சிறப்பிக்குமாறு தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அழைப்பு விடுத்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. படத்தை த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ராணா, அமிதாப் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100 விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு வந்து […]
Continue reading …
திமுக எம்பி பார்த்திபன் சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்கப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து எம்.பி.பார்த்திபன் கூறுகையில், “சேலம் விமான நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். இதுவரையில் விமானத்தில் பயணம் செய்யாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 100 பேருக்கு தனது சொந்த செலவில் விமான பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். சேலம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு கடந்த 2018ம் ஆண்டு முதல் […]
Continue reading …
மசூதியிலிருந்து மர்ம நபர்கள் பூஜைக்கு சென்ற பெண்கள் மீது கல் வீசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் நூவில் பகுதியில் சில பெண்கள் பூஜைக்கு சென்று கொண்டிருந்தபோது மசூதியிலிருந்து மர்ம நபர்கள் சிலர் கற்களை பேசியதாக கூறப்படுகிறது. இதில் சில பெண்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் படையுடன் சென்ற எஸ்பி, பொதுமக்களை சமாதானப்படுத்தியதாகவும் மசூதி […]
Continue reading …
தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செமஸ்டருக்கு இக்கட்டண உயர்வு கிடையாது என தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டணம் ஒரு பேப்பருக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி டிகிரி சான்றிதழ் பெறுவதற்கு 500 ரூபாய் உயர்த்தப்பட்டதாகவும் மாணவர்கள் புராஜெக்ட் செய்வதற்கு 300 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இக்கட்டண உயர்வு மாணவர்கள் மற்றும் பெற்றோர் […]
Continue reading …
அடுத்த மாதம் 30ம் தேதி தெலுங்கானா மாநிலத்தில நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால், விவசாயிகளுக்கு 24மணி நேரம் இலவச மின்சாரம், விவசாயிகளின் ரூ.2 லட்சம் […]
Continue reading …
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், பிற பல்கலைக்கழகங்களுக்கு நீட்டிக்கக் கூடாது என்றும், அண்ணா பல்கலை கட்டண உயர்வுக்கு அமைச்சர் பொன்முடியின் விளக்கம் ஏமாற்றமளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டணம் 50 விழுக்காடும், புராஜெக்ட் கட்டணம் 100 விழுக்காடும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இளநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் கட்டணம் தாளுக்கு ரூ.150லிருந்து ரூ.225 ஆகவும், முதுநிலை பொறியியல் படிப்புக்கான தேர்வுக் […]
Continue reading …
புதிதாக ஏஐ தொழில் நுட்பம் வளர்ச்சி மனிதர்களின் வேலையை எளிதாக்குவதோடு, வேலைபளுவையும் குறைக்கிறது. பல புதிய விஷயங்களுக்கு உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஒருவரின் குரலில் பேசுவது. பாடுவது, டீப் பேக் வீடியோ, மார்பிங் புகைப்படம் என்று பல விஷங்கள் மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. பிரதமர் மோடி கர்பா நடனம் ஆடுவது போன்ற போலி வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ பெரும் […]
Continue reading …
இன்று நடிகை விஜயசாந்தி சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தெலுங்கானா மாநிலத்தில வரவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக காங்கிரஸில் இணைந்தார். தெலங்கானா மாநிலத்தில் அடுத்த மாதம் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் உள்ளனர். விரைவில் தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காத காரணத்தால் முன்னாள் எம்பி,., விஜயசாந்தி காங்கிரஸில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானது. ‘பாரதிய ராஷ்டிரிய சமிதியிடம் […]
Continue reading …