
சபாநாயகர் ஆளுநர் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். நவம்பர் 18ம் தேதி தமிழ்நாடு சட்டசபை சிறப்பு அவசர கூட்டம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து அந்த மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் சபாநாயகர் அப்பாவு பேட்டியில், “ஆளுநர், குடியரசுத் தலைவர், நீதிமன்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம் கிடையாது. தமிழக அரசு […]
Continue reading …
பலராமன் என்பவர் கௌதமி அளித்த நில மோசடி புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தற்போது ஒரு நாள் போலீஸ் காவலில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடுத்து விசாரணை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். அவர் தனது குடும்ப நண்பராக இருந்த அழகப்பன் என்பவர் தன்னுடைய சொத்துக்களை மோசடி செய்ததாக புகாரளித்திருந்தார். இப்புகார் குறித்து தனக்கு பாஜக எந்தவித உதவியும் செய்யவில்லை என்பதால் அவர் கட்சியில் இருந்து […]
Continue reading …
புதிய மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொடங்குவதற்கான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி கூறுகையில், “தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதற்கான தடை நீக்கம் வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கக் கூடாது; ஏற்கனவே தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கக் கூடாது என்று கடந்த 16.08.2023-ஆம் நாள் பிறப்பித்திருந்த […]
Continue reading …
இன்று காலை 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 10ம் வகுப்பு: தமிழ் 26.03.2024 ஆங்கிலம் 28.03.2024 கணிதம் 01.04.2024 அறிவியல் 04.04.2024 சமூக அறிவியல் 08.04.2024 பாடங்கள் தேதி மொழிப் பாடம் மொழிப் பாடம் 01.03.2024 ஆங்கிலம் 05.03.2024 கணினி அறிவியல், உயிரி-அறிவியல், புள்ளியியல், 08.03.2024 வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் 11.03.2024 இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம் 15.03.2024 கணிதம், விலங்கியல், நுண் உயிரியல் 19.03.2024
Continue reading …
ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மீண்டும் ஒருமுறை ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த சில மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். அவருக்கு நேற்று திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டதைடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். […]
Continue reading …
தமிழக ஆளுனர் ஆர்.என் ரவி 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுனருக்கு உத்தரவிடக்கோரி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணையில் உள்ளது. மசோதாக்களை ஆளுனர் திருப்பி அனுப்பியுள்ளார். மீண்டும் மசோதாக்களை நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுனருக்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை மீண்டும் அரசுக்கு திருப்பி […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி திமுக இளைஞரணி மாநில மாநாட்டையொட்டி, திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார். திமுக இளைஞரணி மாநில மாநாடு சேலத்தில் அடுத்த மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக கன்னியாகுமரியில் திமுக இளைஞரணி சார்பில் இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த பேரணியை தொடங்கி வைத்தார். மொத்தம் 13 நாட்கள் 8,647 கிலோ மீட்டர்கள் இருசக்கர வாகன பேரணி நடைபெறுகிறது. […]
Continue reading …
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார், அவருக்கு வயது 102. உடல்நலக்குறைவு காரணமாக சங்கரய்யா கடந்த சில நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தனர். அவர் சிகிச்சை பலனின்றி சங்கரய்யா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவரும் விடுதலை போட்ட வீரருமான போராட்ட வீரருமான சங்கரய்யா பல்வேறு புகழுக்கு […]
Continue reading …
முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில், “இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்-” என்று தெரிவித்துள்ளார். கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில், “மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKridersன் வாகனப் […]
Continue reading …