Home » Archives by category » அரசியல் (Page 87)

அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Comments Off on அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

அமைச்சர் மனோ தங்கராஜ் “எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது” என்று பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு, வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். மேலும் எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும், இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு, […]

Continue reading …

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

Comments Off on முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்து

தற்போது சீன நாட்டில் ஹாங்சோ நகரில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 நடந்து வருகிறது. இந்திய வீரர் நிசாத் குமார் தங்கம் இப்போட்டியில், டி47 உயரம் தாண்டுததல் பிரிவில் வென்றுள்ளார். இப்பிரிவில் 2.02 உயரம் தாண்டிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதேபோல் ஆசியன் பாரா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதல் டி பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் தன் […]

Continue reading …

நடிகை கவுதமிக்கு குஷ்பு புகழாரம்!

Comments Off on நடிகை கவுதமிக்கு குஷ்பு புகழாரம்!

நடிகை குஷ்பு பாஜகவிலிருந்து நடிகை கவுதமி விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 80, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று அவர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என்று வெளியிட்டிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் […]

Continue reading …

கவுதமிக்கு பாஜக துணையாக நிற்பதாக அண்ணாமலை தகவல்

Comments Off on கவுதமிக்கு பாஜக துணையாக நிற்பதாக அண்ணாமலை தகவல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடிகை கவுதமி கொடுத்த புகார் ஆமை வேகத்தில் தான் போய்க் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 80, 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கவுதமி. இவர் பாஜகவில் இணைந்து அக்கட்சி நிர்வாகியாக செயல்பட்டு வந்தார். இன்று “கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். அக்கட்சியில் இணைந்து 25 ஆண்டுகள் ஆனபோதிலும் அக்கட்சித் தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால் அக்கட்சியிலிருந்து விலகுகிறேன்’’ என ஓர் […]

Continue reading …

பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

Comments Off on பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கடிததத்தில், “சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட இயலும், சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய முடியும். இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில் வரவிருக்கும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து […]

Continue reading …

துர்கா ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

Comments Off on துர்கா ஸ்டாலின் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கூட்டத்தில் துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரது விருப்பம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதுகுறித்து அவர் பேசும் போது, “சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் கருத்துகளை உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும், எதிர்மறை பிரச்சாரம் மூலம் எதிரியை வீழ்த்துவதை விட, நேர்மறை பிரச்சாரம் மூலம் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம், சாதி, மதங்களின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் கட்சியுடன் நாம் […]

Continue reading …

காட்டுமிராண்டிதனம் செய்யும் திமுக அண்ணாமலை சாடல்

Comments Off on காட்டுமிராண்டிதனம் செய்யும் திமுக அண்ணாமலை சாடல்

தமிழக பாஜக தலைவர் அண்ணாம¬லை தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் திமுக துடிப்பதாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதளத்தில், “குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் […]

Continue reading …

பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

Comments Off on பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்
பாஜக கொடிக்கம்பம் குறித்து தாம்பரம் காவல் ஆணையரகம் விளக்கம்

தாம்பரம் காவல் ஆணையரகம் பாஜக கொடிக்கம்பத்தை அகற்றிய விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடு அருகே மாநகராட்சியிடம் முன் அனுமதி பெறாமல் கொடிக்கம்பத்தை நட்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவும், கொடிக்கம்பத்தை அகற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது பாஜகவினர் போராட்டம் செய்ததாகவும் கூறினார். மேலும் பாஜகவினர் மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி இயந்திரத்தை உடைத்தனர் என்றும், இதனால் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் காவல்துறை விளக்கமளித்துள்ளது. முன்னதாக பாஜகவின் […]

Continue reading …

உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

Comments Off on உதயநிதி ஸ்டாலின் நீட் குறித்து விமர்சனம்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை என்பதை குறிப்பதற்காக ஒரே ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அதேபோல் தற்போது உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து விளக்க பிரச்சாரத்தில் கையில் ஒரு முட்டையை வைத்துக்கொண்டு பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கையெழுத்து இயக்க தொடக்க விழாவில் நீட் பிஜி தேர்வில் முட்டை பர்செண்டேஜ் எடுத்தால் […]

Continue reading …

செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

Comments Off on செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இம்மனு மீது விசாரணை நடந்த போது அமலாக்கத்துறை தரப்பில் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. […]

Continue reading …