Home » Archives by category » அரசியல் (Page 89)

குடியரசு தலைவர் தமிழகம் வருகை!

Comments Off on குடியரசு தலைவர் தமிழகம் வருகை!

தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகிறார் என தகவல் வெளியாகிறது. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தமிழ்நாடு வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

Continue reading …

பாஜகவுடன் கூட்டணி இல்லை திட்டவட்டம்!

Comments Off on பாஜகவுடன் கூட்டணி இல்லை திட்டவட்டம்!

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டுள்ளன. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இக்கூட்டணியிலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகியது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எழுதிய கடிதத்தில், ‘பாஜகவுக்கு நன்றி மீண்டும் வரவேண்டாம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூகவலைதளங்களில் ஹேஸ்டேக்காக வைரலானது. தேர்தலுக்கு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுக தலைமை […]

Continue reading …

அண்ணாமலை பாதயாத்திரை மீண்டும் தொடக்கம்!

Comments Off on அண்ணாமலை பாதயாத்திரை மீண்டும் தொடக்கம்!

உடல் நலக்குறைவால் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மீண்டும் தொடங்குவதாகவும், அண்ணாமலையின் 3-ம் கட்ட யாத்திரையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்’’ பாதயாத்திரை கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்த இந்த பாதயாத்திரை வெற்றிகரமாக 2 கட்டம் முடிவடைந்தது. ராமேஸ்வரம் முதல் சென்னை வரை நடைபெறும் இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் […]

Continue reading …

குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம்!

Comments Off on குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம்!

இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழகத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் விரைவில் ஏவுதளம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ்நாடு வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் 2 நாள் பயணமாக வந்துள்ளார். ராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நேற்று கலந்து கொண்டார். இதையடுத்து அவர் இன்று செஸ் வீரர் பிரக்ஞானந்தாவின் வீட்டிற்கு சென்று அவருக்கு நேரில் பாராட்டு தெரிவித்தார். தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய சோம்நாத், பின் செய்தியாளர்கள் சந்திப்பில், “முதலமைச்சரை […]

Continue reading …

குழந்தை விற்பனை தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட்!

Comments Off on குழந்தை விற்பனை தொடர்பாக மருத்துவர் சஸ்பெண்ட்!

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து மா.சுப்பிரமணியன் பேட்டியில், “குழந்தை விற்பனையில் அரசு மருத்துவர் அனுராதா உடந்தையாக இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது குறித்து தெரியவந்துள்ளதால் அது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. குற்றம் உறுதி செய்யப்பட்டால் மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு என்ற பகுதியில் விசைத்தறி தொழிலாளி தம்பதிக்கு கடந்த […]

Continue reading …

அதிமுக முன்னாள் எம்.பி. எடப்பாடி குறித்து கருத்து

Comments Off on அதிமுக முன்னாள் எம்.பி. எடப்பாடி குறித்து கருத்து

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்தியா என்ற பெயரில் அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி கொண்டுள்ளது. பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன. இக்கூட்டணியில் இருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகியது. தேர்தலின் போதோ, தேர்தலுக்குப் பின்னரோ அவர் பாஜகவை எதிர்த்து நிற்பார் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் ஏற்படவில்லை என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் “பாஜக […]

Continue reading …

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

Comments Off on உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மாவட்டத்தில் சாவடி மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவிதுள்ளார். முதலமைச்சரின் அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம் கொழுமம் கிராமம், கொழுமம் பழனி முதன்மைச் சாலையிலுள்ள சாவடியின் முகப்பு மேற்கூரை இன்று காலை எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்ததில் முரளி ராஜா, தபெமன்மதன் (வயது 35). கௌதம், தபெ சின்னதேவன் (வயது 29) மற்றும் திருமணிகண்டன், தபெ யாழி (வயது 28) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்து அவர்களை […]

Continue reading …

சனாதனம் பற்றி விளக்கமளித்த கமலஹாசன்!

Comments Off on சனாதனம் பற்றி விளக்கமளித்த கமலஹாசன்!

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து கருத்து தெரிவித்தது பெரும் சர்ச்சையானது. அவரது கருத்துக்கு பாஜக மட்டுமின்றி இண்டியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. உதயநிதி பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்தாலும் திரையுலகில் இருந்து அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஏற்கனவே வெற்றிமாறன், சத்யராஜ் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது கமல்ஹாசன் “சனாதனம் பற்றிய கருத்து சொல்ல உதயநிதி […]

Continue reading …

ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

Comments Off on ஜி20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்கள் வரவில்லையா?

ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் எந்த வகையிலும் கலந்து கொள்ள மாட்டார் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு ஒவ்வொரு நாட்டில் நடைபெறும். இவ்வாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 9, 10) டில்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பல நாட்டு தலைவர்களும் வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாநாட்டிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வரமாட்டார் என சீனா […]

Continue reading …

அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

Comments Off on அமெரிக்க பொருட்கள் மீதான வரி நீக்கம்!

அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. உலகளவில் முக்கியமான ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு டில்லியில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் டில்லிக்கு வருகை புரிந்து வருகின்றனர். உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க […]

Continue reading …