பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆம்ஸ்ட்ராங் கொலையின் மூலம் சென்னையில் அரசியல்வாதிகள் பின்னணியில் ராஜாங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது என கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின் நடைபெறும் சம்பவங்கள், காவல் துறையின் நடவடிக்கைகள், கைதுகள், அதனை தொடர்ந்து வரும் செய்திகள் அனைத்தும், இத்தனை காலம் சென்னை மாநகரம் ரவுடிகளின் ராஜ்யத்தில் எவ்வாறு இருந்து வந்தது என்பதை தெளிவாக்குகிறது. அரசியல் போர்வையில், அரசியல்வாதிகளின் பின்னணியில் இந்த ராஜாங்கம் நடைபெற்றுக் […]
Continue reading …உச்சநீதிமன்றத்தில் கிரிமினல் வழக்குகளில் ஆளுநரை விசாரிக்க விதிக்கப்பட்டுள்ள சட்ட விலக்கை எதிர்த்த மனு மீது விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில் மத்திய அரசும், மேற்கு வங்க அரசும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பாலியல் தொல்லை விவகாரத்தில் மேற்கு வங்க ஆளுநர் மாளிகை பெண் ஊழியர் தொடர்ந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது. கிரிமினல் வழக்குகளில் ஆளுநரை விசாரிக்க விதிக்கப்பட்டுள்ள சட்ட விலக்கை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தனக்கும், குடும்பத்தாருக்கும் […]
Continue reading …காலை 9.30 மணிக்கு இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் என்று சட்டசபை விதிகள் குழுவில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஆனால், கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணிக்கு முடிவடைந்தது. மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரை பேரவை கூட்டம் நடத்தப்பட்டது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் […]
Continue reading …கர்நாடக சட்டமன்றத்தில் கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களிலும் 100 சதவீதம் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான மசோதாவை நேற்று நிறைவேற்றியுள்ளனர். சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் நடந்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள வேலைவாய்ப்புகள் கன்னடர்களுக்கே முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே மக்கள் கூறி வருகின்றனர். தனியார் துறைகளில் மற்ற மாநிலத்தவரை விட கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான […]
Continue reading …நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி […]
Continue reading …தமிழக அரசு மேலும் 36 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், “டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் கூடுதல் உள்ளுறை ஆணையராக ஆஷிஷ்குமாரும், மீன்வளத் துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு, போக்குவரத்துத் துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஏ.சண்முக சுந்தரம் கைத்தறித் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல்கழக மேலாண் இயக்குனர் ஆர்.கஜலட்சுமி மீன்வளத் துறை இயக்குனராகவும், தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனராக வேளாண் துறை சிறப்பு செயலர் பி.சங்கரும் […]
Continue reading …எடப்பாடி பழனிச்சாமி அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டது. தற்போது இருப்பதில் இருந்து 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி, 0 முதல் 400 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 4 ரூபாய் 80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. […]
Continue reading …ஆம் ஆத்மி கட்சி டில்லி முதலமைச்சசர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சில மாதங்களாக ஜாமீன் கிடைக்காமல் உள்ளது. அரவிந்த எதிர்பால் உடல்நிலை மோசமான நிலையை எட்டி இருப்பதாக அவரது கட்சியினர் கூறி வருகின்றனர். இதற்கு சிறை நிர்வாகம் தான் காரணம் என்று குற்றச்சாட்டு கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி […]
Continue reading …பாஜகவின் பலம் மாநிலங்களவையில் நியமன எம்.பி.க்கள் நான்கு பேர் ஓய்வு பெற்றுள்ளதால் 86ஆக சரிந்துள்ளது. இதனால் மசோதாக்களை தாக்கல் செய்ய அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் தற்போது உருவாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா சட்டமாக வேண்டுமானால், இரண்டு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக அசுர பலத்தில் இருந்த ஆளும் பாஜக, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையை இழந்து கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. மாநிலங்களவையிலும் பாஜகவின் […]
Continue reading …நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற பெயரை பயன்படுத்தினால் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சண்டாளர் என்ற சாதி பெயரை கடந்த சில நாட்களாக பயன்படுத்தியதாக சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு சீமான் பதிலளித்தார். தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் தமிழக அரசுக்கு ஒரு முக்கிய பரிந்துரையை செய்துள்ளது. இதன்படி சண்டாளர் என்று சாதி பெயரை பயன்படுத்த கூடாது என்றும் நகைச்சுவையாகவோ அரசியல் […]
Continue reading …