
கவர்னர் ஆர்.என்.ரவி நீட் தேர்வு தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மசோதாவிற்கு ஒருபோதும் அனுமதி அளிக்க மாட்டேன் என அவர் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில், “ஒரு பெற்றோராக நீட் தேர்வு தடை எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறேன்” என்று ஒருவர் கேள்வி எழுப்பியபோது “நீட் தேர்வுக்கு ஒருபோதும் நான் தடை கொடுக்க மாட்டேன். நமது குழந்தைகளை கஷ்டத்திற்கு ஆழ்த்த நான் விரும்பவில்லை. நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர் சென்று படிக்க […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரையை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்கு நேரி பெருந்தெருவில் வசிப்பவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் […]
Continue reading …
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஏராளமான மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வரும் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கலைஞர் மகளிர் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக […]
Continue reading …
மணிப்பூரில் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி இதன் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் தொடங்கியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றியிருந்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் என்று தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவில் உள்ள முனியாண்டியின் மனைவி அம்பிகாபதி. இத்தம்பதியரின் 17 வயது மகன் சின்னத்துரையும், 14 வயது மகளும் வள்ளியூரில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். வீட்டில் அந்த மாணவரும், அவரது தங்கையும் வீட்டில் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து […]
Continue reading …
நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகம் வரவிருப்பதால் அவருக்கு பிரம்மாண்டான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார். நாளை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டில்லியிலிருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார். உதகையில் […]
Continue reading …
தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவின் கடன் அதிகமானது என கூறியுள்ளார் சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் சாட்டியிருந்தார். கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் […]
Continue reading …
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் […]
Continue reading …
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்தாண்டு இத்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் […]
Continue reading …
அ.ம.அ.க தலைவர் ராஜேஸ்வரி பிரியா “கஞ்சா புழக்கத்தினை முழுமையாக ஒழிப்பதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதனை செய்யாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ‘போதைப் பொருட்கள் […]
Continue reading …