
தலைநகர் டில்லியில் ரூ.1200 கோடி மதிப்பு போதைப்பொருள் பிடிபட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லியில் 1200 கோடி மதிப்பிலான மெத்தம்பேட்டமைன் என்ற போதை பொருள் பிடிபட்டுள்ளது. இதையடுத்து இப்போதைப் பொருளை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இருவரிடம் கைப்பற்றியதாக டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது ஆப்கான் நாட்டைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணையில் லக்னோவில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 312 கிலோ போதைப்பொருள் சிக்கி உள்ளது. அதன் மதிப்பு 1,200 […]
Continue reading …
ஆந்திர மாநிலத்தில் காதலிக்க மறுத்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவியை தாய்மாமன் கழுத்தை அறுத்து ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இக்காதலை அந்த மாணவி ஏற்றுக் கொள்ளாததால் ஆத்திரமடைந்த நாகராஜ் மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்து முகத்தில் ஆசிட்டை வீசிவிட்டு தப்பித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரை மருத்துவமனையில் அவரது பெற்றோர் அனுமதித்தனர். தலைமறைவாக உள்ள நாகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
Continue reading …
இந்தியன் ஆயில் டீலர்கள் சங்கம் பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு இல்லை என தெரிவித்துள்ளது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது வாகன ஓட்டிகள் பெரும் நிம்மதியை அளித்தாலும், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தி தீயாக பரவி வருகிறது. சென்னையிலுள்ள பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் டீசல் இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இது […]
Continue reading …
கேரள நீதிமன்றம் ஆபாச உடை அணிந்த பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்தால் அது குற்றமாகாது என்று தீர்ப்பு வழங்கி உள்ளது. இத்தீர்ப்புக்கு பெண்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. கேரள ஐகோர்ட் நீதிபதி வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கியபோது ஆபாச உடை அணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் செய்தால் குற்றமாகாது என்று கூறியுள்ளார். இத்தீர்ப்புக்கு பெண்கள் மற்றும் மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இத்தீர்ப்புக்கு கடும் விமர்சனங்களை பெண்களின் அமைப்பு செய்து வருகிறது. ஆண்களை […]
Continue reading …
இம்மாதம் 27ம் தேதி முதல் திருப்பதியில் பிரம்மோற்சவ விழா தொடங்க இருப்பதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த மெகா திருவிழா தொடக்கத்தை அடுத்த கொடியேற்று விழா நடைபெற உள்ளதாகவும் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி […]
Continue reading …
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மடாதிபதி சிவமூர்த்தி முருகன் மீது இரண்டு மாணவிகள் பாலியல் புகாரளித்திருந்தனர். இதையடுத்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 14 நாட்கள் காவலில் வைக்க போலீசார் அனுமதி கேட்ட நிலையில் நீதிபதி அதற்கு அனுமதி […]
Continue reading …
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் சுங்கச்சாவடி தடுப்புகளை இடித்துச் சென்ற வாகனங்களின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக பாஜக தொடர்ந்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ஆக்ராவில் டிராக்டரில் மணல் நடத்தி வந்த கொள்ளையர்கள் அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு, […]
Continue reading …
மூத்த குடிமக்களின் நலனில் அக்கறை கொண்டு இந்தியாவிலுள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் நல்ல அறிவிப்புகளை வழங்கி வருகிறது. ஓய்வூதியம் பெறும் பென்சனர்கள் தங்களது ஆயுள் சான்றிதழை வருடா வருடம் கொடுத்துதான் பென்சன் தொகையை பெற வேண்டியிருக்கும். மிக எளிதாக அஞ்சலகத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மூலம், ஓய்வூதியம் பெறும் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை வாழ் நாள் சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த […]
Continue reading …
2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி கடந்த ஆண்டைவிட 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது. நாட்டில் 1.43 லட்சம் கோடியை ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜிஎஸ்டி வசூலை எட்டியுள்ளது. மேலும் தொடர்ந்து ஆறாவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் இந்த சாதனையை படைத்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து வருகிறது. இந்த கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை மத்திய நிதியமைச்சகம் சற்றுமுன் […]
Continue reading …
ஜார்க்கண்ட்டில் பாஜக நிர்வாகி கொடூரத்தின் உச்சத்தை நிகழ்த்தியுள்ளார். வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை பாஜக நிர்வாகி சீமா பத்ரா கொடூரமாக டார்ச்சர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் மகளிர் பிரிவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் சீமா பத்ரா. இவரது வீட்டில் பணியாற்றிய பழங்குடியின பெண்ணை கொடூரமாக டார்ச்சர் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் வீடியோவில் தான் சந்தித்த கொடுமைகளை பகிர்ந்துள்ளார். வீடியோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் தெரிகிறது. அதில் அந்த […]
Continue reading …