Home » Archives by category » இந்தியா (Page 110)

சந்திரபாபு நாயுடு சென்ற படகு விபத்து!

Comments Off on சந்திரபாபு நாயுடு சென்ற படகு விபத்து!

ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற படகு திடீரென கவிழ்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனமழையால் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்ற முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு படகில் சென்ற போது திடீரென படகு கவிழ்ந்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அப்படகில் இருந்தவர்களும் தண்ணீரில் மூழ்கினர். மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து சந்திரபாபுநாயுடு உள்ளிட்ட அனைவரையும் கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு […]

Continue reading …

குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

Comments Off on குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கை கேரளாவில் உயர்வு!

ஏற்கனவே குரங்கு அம்மையால் கேரளாவில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல் முதலாக கேரளாவில் குரங்கு அம்மையால் ஒருவர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்நோயின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து கேரளாவில் மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து கேரளாவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டோர் […]

Continue reading …

கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

Comments Off on கோடிக்கணக்கான சொத்துக்களை வழங்கிய மருத்துவர்!

மருத்துவர் ஏழை-எளிய மக்களுக்காக ரூ.600 கோடி சொத்துகளை கொடுத்துள்ளார். மருத்துவர் அரவிந்த் கோயல் உத்தரப்பிரதேச மாநிலம் மொரோதாபாத்தைச் சேர்ந்தவர். இவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் தனது ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்துகளை உத்தரபிரதேச மாநில அரசுக்கு கொடுத்துள்ளார். இவர் பல விருதுகள் பெற்றுள்ள இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் 1 மகள் உள்ளனர். அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Continue reading …

ரயில்வே துறைக்கு கோடிகளில் இழப்பு!

Comments Off on ரயில்வே துறைக்கு கோடிகளில் இழப்பு!

ரயில்வே துறைக்கு அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே இணையமைச்சர் தகவல் அளித்துள்ளார். வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தினால் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. பல ரயிலுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்களில் நடந்து வன்முறைகளால் இந்திய ரயில்வேக்கு ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை இணையமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஜூன் 14ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில்களில் […]

Continue reading …

தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு!

Comments Off on தேசிய விருதுகள் நாளை அறிவிப்பு!

நாளை தேசிய விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் திரைப்படமான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ போன்ற திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான “சூரரைப்போற்று”, “ஜெய்பீம்“ ஆகிய படங்களுக்கு நாளை அறிவிக்கப்படும் தேசிய விருதில் விருது கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக […]

Continue reading …

நீட் தேர்வு விவகாரம்: 5 பெண்கள் கைது!

Comments Off on நீட் தேர்வு விவகாரம்: 5 பெண்கள் கைது!

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களையச் சொன்ன 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கேரளாவில் நீட் தேர்வு எழுத கடந்த ஞாயிறன்று வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் […]

Continue reading …

குரங்கு அம்மையால் 2வது நபர் பாதிப்பு!

Comments Off on குரங்கு அம்மையால் 2வது நபர் பாதிப்பு!

குரங்கு அம்மை நோயால் ஏற்கனவே கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது இரண்டாவது நபர் ஒருவருக்கும் குரங்குஅம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை கூறுகையில் “குரங்கு அம்மை நோய் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். வாயின் உள்பகுதியில் வலி இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏற்கனவே ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Continue reading …

இன்ஜினியர் ஏமாற்றிய 8 பெண்கள்!

Comments Off on இன்ஜினியர் ஏமாற்றிய 8 பெண்கள்!

இஞ்சினியர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவர் மீது அனைத்து பெண்களும் குற்றம் சாட்டியுள்ளனர். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் சிவசங்கர் பாபு. இவர் ஆந்திரா மாநிலம குண்டூரை சேர்ந்தவர். இவர் திருமணத் தகவல் மையங்களில் தனக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக விளம்பரம் செய்து, விவாகரத்து பெற்ற பெண்களைத் தொடர்ந்து கொண்டு பேசியுள்ளார். இவர் மீது சில பெண்கள் காதலில் விழுந்துள்ளனர். அவர்களிடமிருந்து, நகைகள், மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார் சிவசங்கர் […]

Continue reading …

நிதி கொடுத்த முதலமைச்சர் தூக்கியெறிந்த பெண்!

Comments Off on நிதி கொடுத்த முதலமைச்சர் தூக்கியெறிந்த பெண்!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ரூ.2 லட்சம் நிதி கொடுத்துள்ளார். அந்த பணத்தை அப்பெண் தூக்கி எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில பாதாமி என்ற தொகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ரூபாய் 2 லட்சம் நிதியுதவியளித்தார். ஆனால், அப்பணத்தை அவர் சித்தராமையா காரின் முன் தூக்கி எறிந்தார். “பணத்தைவிட எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்று கூறியபடி அவர் […]

Continue reading …

டில்லியில் குடோனில் விபத்து!

Comments Off on டில்லியில் குடோனில் விபத்து!

டில்லியில் குடோன் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டில்லியில் அலிபூர் என்ற இடத்தில் உள்ள குடோனின் சேமிப்புக்கிடங்கில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue reading …