நீட் தேர்வு விவகாரம்: 5 பெண்கள் கைது!

Filed under: இந்தியா |

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் உள்ளாடைகளை களையச் சொன்ன 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கேரளாவில் நீட் தேர்வு எழுத கடந்த ஞாயிறன்று வந்த மாணவிகள் சிலரின் உள்ளாடைகளை கழற்றச் சொல்லி வலியுறுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய தேர்வு முகமை பணியாளர்கள் மூன்று பேர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் 2 பேர் என மொத்தம் 5 பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்தது. சர்ச்சைக்குரிய தேர்வு மையத்தின் ஜன்னல் கதவுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.