
விண்ணில் பாய்கிறது PSLV C-53 என்ற ராக்கெட் 3 செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பிஎஸ்எல்வி சி 53ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராகிருப்பதாகவும், கவுண்ட் டவுன் தொடங்கி விட்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. ராக்கெட்டில் உள்ள செயற்கை கோள்கள் பூமியை மிக துல்லியமாக படம் எடுக்கும் என்றும் DS-EO உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இந்த ராக்கெட்டில் இருப்பதாகவும் […]
Continue reading …
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிடில் அபராதம் இருமடங்காக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆதார் மற்றும் பான் எண் இரண்டையும் இணைக்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறது. இன்றுக்குள் இரண்டையும் இணைக்காதவர்கள் இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டுமென அறிவித்துள்ளது. இந்த இரண்டையும் இணைப்பதற்கு மார்ச் 31ம் தேதி கடைசி தேதி என்று நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அதன் பின்னர் இணைக்கப்பட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது 500 ரூபாய் அபராதத்துடன் ஆதார் […]
Continue reading …
காஷ்மீர் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்தியாவில் உண்மையான இந்துக்களால் வாழமுடியாத சூழல் உருவாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். சர்மாவிற்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் ஞானவாபி மசூதி குறித்த பாஜகவைச் சேர்ந்த செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்கள் இந்தியா முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுபோன்ற ஒரு கருத்தைப் பகிர்ந்த டில்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் […]
Continue reading …
புதுடில்லி அரசு நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டில்லியில் ஆண்டுதோறும் காற்று மாசுபாடு பிரச்னை பெரிதாகவே உள்ளது. பள்ளி மற்றும் அலுவலகங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கும் நிலை தற்போது உருவாகி உள்ளது. குளிர்காலத்தில் வாகனங்களின் புகையும் சேர்ந்து அடர்த்தியான புகை மண்டலமாக மாறி மக்கள் சுவாசிக்கவே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லி அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் எதிர்வரும் […]
Continue reading …
தம்பதியர் அயோத்தியில் உள்ள சரயு நதியில் குளித்துள்ளனர். அவர்களின் செய்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் தம்பதியரை சரமாரியாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமர் பிறந்த பகுதியாக கருதப்படும் அயோத்தியில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இங்குள்ள சரயு நதி புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அயோத்தி கோவில்களுக்கு வருபவர்கள் சரயு நதியில் நீராடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நதியில் நீராட தம்பதியர் ஒருவர் வந்துள்ளனர். அவர்கள் நீண்ட நேரமாக தண்ணீரில் இருப்பதை கண்ட சக நீராடியவர்கள் […]
Continue reading …
திருமாவளவனுக்கு பாஜக வேட்பாளராக பழங்குடியின பெண் திரௌபதி முர்முவை நிறுத்தியுள்ளதால் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். திருமாவளவன் பழங்குடியினர் மற்றும் தலித் மக்களுக்காக குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் பழங்குடியின பெண் ஒருவர் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். இப்போது திருமாவளவனின் ரியாக்ஷன் என்ன என்பதே நெட்டிசன்களீன் கேள்வி. முஸ்லிம் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா குடியரசு […]
Continue reading …
ஒரே நாளில் ஒரு ரயிலில் மட்டுமே டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் பீகாரிலிருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களிடம் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து சென்னை வழியாக எர்ணாகுளம் வரை செல்லும் ரப்தி சாகர் விரைவு ரயில் நேற்று இரவு சென்னை வந்தது. அதில் பயணித்தவர்களிடம் டிக்கெட் பரிசோதகர்கள் நடத்திய சோதனையில் பலரும் டிக்கெட் இல்லாமல் பயணித்தது தெரிய […]
Continue reading …
டில்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கின்றன. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது. இன்றும் […]
Continue reading …
குறுகிய ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் சேவை செய்ய “அக்னிபாத்” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. இந்திய ராணுவத்தில் ஆண்டுதோறும் முப்படைகளான ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றில் பணிபுரிய தீரமிக்க வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ராணுவத்திற்கு பொதுவாகவே பணிபுரிய செல்பவர்கள் குறுகிய காலமாக 10 ஆண்டுகளும், நிரந்தர அடிப்படையில் ஓய்வு பெறும் வரையிலும் பணிபுரியலாம் என்ற நடைமுறை தான் உள்ளது. ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்களின் பங்களிப்பை ஏற்படுத்தும் விதமாக மத்திய அரசு “அக்னிபாத்” என்ற குறுகிய கால 4 ஆண்டுகள் […]
Continue reading …
கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது கேரள மாநிலத்தில் உள்ள ஒருவரது கோழி. இந்த அதிசய கோழி கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவருடையது. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேல் தீஸ்-380 வகையைச் சேர்ந்த கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார். அதில் சின்னு என பெயரிடப்பட்டுள்ள ஒரு கோழி காலை சுமார் 8.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை 24 முட்டைகளை போட்டுள்ளது. […]
Continue reading …