Home » Archives by category » இந்தியா (Page 115)

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Comments Off on உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டெல்லி உயர்நீதிமன்றம் கட்டாய மதம் மாற்றம் சட்டப்படி குற்றம் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்திலுள்ளவர்களை கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக ஒரு சில மதங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் ஒவ்வொருவரும் தமக்கான மதத்தை தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு. மதம் மாறுவதற்கு யாரும் யாரையும் நிர்பந்தம் செய்யக்கூடாது. சட்டப்படி கட்டாய மதமாற்றம் என்பது தவறானது. கட்டாய […]

Continue reading …

சோனியாவின் மகளுக்கும் கொரோனா

Comments Off on சோனியாவின் மகளுக்கும் கொரோனா

நேற்றைய தினம் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் தன்னைத்தானே அவரது வீட்டில் அவரை தனிமைப்படுத்திக் கொண்டார். தற்போது சோனியா காந்தியின் மகளான பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. 2024ம் வரவிருக்கும் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளை முன்னெடுத்து சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை பிரியங்கா காந்தி கலந்து ஆலோசித்து வருகிறார். பிரியங்கா காந்தி […]

Continue reading …

பாராளுமன்ற புதிய கட்டிடம் பற்றிய புதிய தகவல்!

Comments Off on பாராளுமன்ற புதிய கட்டிடம் பற்றிய புதிய தகவல்!

வரும் நவம்பர் 26ம் தேதி புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் அமர்வதற்கான போதுமான வசதி இல்லை என்பதால் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் எம்பிக்கள், மற்றும் பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கட்டுமானப் பணிகள் வரும் அக்டோபர் மாத இறுதியில் முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களுக்கு அவசகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் முடிவடைந்து, அரசியலைப்பு சட்ட தினமான நவம்பர் 26ம் தேதி முதல் புதிய பாராளுமன்றக் கட்டிடம் […]

Continue reading …

சோனியா காந்திக்கு கொரொனா உறுதி!

Comments Off on சோனியா காந்திக்கு கொரொனா உறுதி!

சோனியா காந்திக்கு கொரொனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்போது முக்கிய தலைவர்கள் வெவ்வேறு கட்சிக்கு தாவி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோற்றது. அதுமட்டுமில்லாமல், நான்கு மாநிலத் தேர்தலிலும் அது தோல்வியைத் தழுவியது. இக்கட்சியில் சமீபத்தில் ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியை சீரமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கொரொனா தொற்று உறுதி […]

Continue reading …

மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்யமான தகவல்!

Comments Off on மும்பை ஐஐடி வெளியிட்ட ஆச்சர்யமான தகவல்!

ஐஐடி ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது. அந்த ஆய்வு என்னவென்றால், எந்த மாநிலத்தில் அதிக கோவில்கள் உள்ளன என்பதுதான். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல கடவுள்களுக்கும் கோவில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பெரும்பாலும் இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோவில்கள் அவர்களின் நம்பிக்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் உள்ள நிலையில் ஏராளமான கோவில்களும் நாடு முழுவதும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் மும்பை ஐஐடி எந்த மாநிலத்தில் அதிகமான கோவில்கள் உள்ளன என […]

Continue reading …

குண்டுகள் முழங்க மறைந்த பாடகருக்கு மரியாதை!

Comments Off on குண்டுகள் முழங்க மறைந்த பாடகருக்கு மரியாதை!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பிரபலமான பாடகரான கே.கே.வுக்கு குண்டுகள் முழங்க மரியாதை செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி, மராத்தி, குஜராத்தி, மலையாளம் என பல இந்திய மொழிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் பிரபல பாடகரான கே.கே. இவர் கலந்து கொண்ட கல்லுரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் திடீரென விழா மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரது முழுப்பெயர் கே.கே என்னும் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.சிறுவயதிலேயே பெற்றோருடன் […]

Continue reading …

2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்..?

Comments Off on 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்..?

மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவின் உயர்ந்த விருதுகளான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் பாரத ரத்னா விருதிற்கு பிறகு மிக உயர்ந்த விருதுகளாக பத்ம விருதுகள் உள்ளன. பத்மபூஷன், பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய இந்த விருதுகள் ஆண்டுதோறும் கலை, கலாச்சாரம், சினிமா, பொதுசேவை என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அவர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்படுகிறது. 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 2023 குடியரசு தினத்தின்போது வழங்கப்பட உள்ளன. இதற்கான பரிந்துரைகளை அனுப்ப மத்திய […]

Continue reading …

குடிமகனை புரட்டி எடுத்த பெண்!

Comments Off on குடிமகனை புரட்டி எடுத்த பெண்!

பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் தொல்லை கொடுத்தவரை அப்பெண் நடுரோட்டில் புரட்டி எடுத்த சம்பவம் நடந்தேறி உள்ளது. கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பனமாரம் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவர் வெங்கபள்ளி நோக்கி செல்லும் பேருந்தில் பயணித்துள்ளார். அருகில் இருந்த இருக்கையில் இருந்த நபர் சந்தியாவிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சந்தியா அவரை வேறு சீட்டில் அமருமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் சந்தியா சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாமல் மறுபடியும் அதே சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். சக பயணிகள் […]

Continue reading …

ஹெச்டிஎப்சியின் புதிய கிளைகள்!

Comments Off on ஹெச்டிஎப்சியின் புதிய கிளைகள்!

இந்தியாவில் “6000 புதிய கிளைகளை திறக்க திட்டம்“ ஹெச்டிஎப்சி வங்கி திறப்பதாக தெரிவித்துள்ளது. முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி சுமார் 6000 கிளைகள் திறப்பது தங்களின் இலக்கு என தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி சீனிவாசன், “நாங்கள் எங்கள் இலக்கை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு 730 புதிய கிளைகள் திறந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 முதல் 2000 கிளைகள் திறக்கும் எண்ணம் […]

Continue reading …

130 கோடி மக்களின் சேவகன்!

Comments Off on 130 கோடி மக்களின் சேவகன்!

தன்னை ஒரு பிரதமராக என்றுமே கருதியதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். பிரதமராக பதவியேற்று 8 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இன்று இமாச்சல பிரதேசத்தில் மக்களுக்கு கிசான் திட்டத்தின் கீழ் நிதியை விடுவித்து பேசிய பிரதமர் மோடி “இன்று இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உலக அளவில் பேசப்படுகிறது. உலக வங்கியே இந்தியா குறித்து […]

Continue reading …